Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-துலாம்





சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
சலுகைகள் கிடைக்கும், - படிப்பில் மந்தம்


சேவை செய்வதில் ஆர்வம் உள்ள துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 3ல் ராகு, 9ல் கேது, 12ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை ராசிக்கு ஆறாம் இடமான மீனத்தில் பிரவேசம் செய்கிறார்.
செயல்களில் சுறுசுறுப்பு உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அளிப்பவர்களிடம் மட்டும் பேசுவது நல்லது. கூடுதல் முயற்சி இருந்தால் மட்டுமே உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. இளைய சகோதரரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். வீடு, வாகன வகையில் இருக்கும் நிலையை தக்கவைத்துக் கொள்வதே போதுமானது. தாயின் உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். புத்திரர்கள் உங்கள் பேச்சை புறக்கணிப்பர். சரியான வழிகாட்டுதல், கண்டிப்பும் அவர்களை நல்வழிப்படுத்தும். உடல்நலம் சுமாராக இருக்கும். எதிரிகள் உங்களிடம் பாசத்துடன் நடப்பதுபோல் நடித்து கவிழ்க்க நினைக்கலாம். கவனமாக இருங்கள். பணவரவு நன்றாக இருக்கும். தம்பதியர் ஒற்றுமை சிறப்பாக அமையும். உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். தந்தைவழி உறவினர்கள் நம்பிக் கைக்கு உரியவர்களாக நடப்பர். ஆபத்தான பணிகளில் ஈடுபடுவது கூடாது. தந்தைவழி பூர்வீக சொத்து சிலருக்கு கிடைக்கும்.
குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்கள் அன்பு காட்டுவர். வெளியூர் பயணங்கள் லாபத்தை தரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற முயற்சிப்பவர்கள் அதிக பணம் செலவழிக்க நேரிடும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு உண்டாகும்.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் உங்கள் எதிர்பார்ப்பு பெருமளவில் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய தொழில், கிளை துவங்கவும் வாய்ப்பு உள்ளது. டெக்ஸ்டைல், இரும்பு, காகிதம், தோல், கட்டுமான பொருட்கள், பிளாஸ்டிக், தண்ணீர் சார்ந்த தொழில் செய்வோர், ரியல் எஸ்டேட், டிராவல் ஏஜென்சி, லாட்ஜ், மருத்துவமனை, பால் பண்ணை, கம்ப்யூட்டர் நிறுவன அதிபர்கள் நல்ல லாபம் பெறுவர். பணியாளர்கள் நம்பிக்கையுடன் பணிபுரிந்து உங்களுக்கு கைகொடுப்பர். நிர்வாகம், உற்பத்தி தரத்திற்கான விருது சிலருக்கு கிடைக்கும்.
வியாபாரிகள்: ஜவுளி, நகை, பலசரக்கு, தானியங்கள், மருந்து, மருத்துவ உபகரணம், இறைச்சி, காய்கனி, பூ, பர்னிச்சர், விவசாய இடுபொருட்கள், மின்சார உபகரணங்கள், பட்டாசு வியாபாரம் செய்பவர்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அழகு சாதன பொருட்கள், தண்ணீர், வாசனை திரவியம், பால் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு விற்பனை அதிகமாகி உயர்ந்த லாபம் பெறுவர். அபிவிருத்தி பணிகள் செய்வதற்கு வழிவகை உண்டாகும். சரக்கு கொள்முதலில் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சரக்கு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புதியயுக்திகளை கையாண்டுகூடுதல் வாடிக்கையாளர்களை பெறுவர்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு பணிகளை சிறப்பாக செய்வர். நிர்வாகத்திடம் நீண்டநாள் எதிர்பார்த்த சலுகைகள் ஓரளவுக்கு கிடைக்கும். பணி இலக்கை சரியாக நிறைவேற்றி அதிகாரிகளின் பாராட்டை பெறுவர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும். தொழில்நுட்பம், கைவினைப் பொருட்கள் வடிவமைப்பு சார்ந்த தொழில் புரிபவர்கள் கூடுதல் பணிவாய்ப்பும் சம்பள உயர்வும் பெறுவர். கூர்மையான பொருட்களை கையாளும் பணியில் உள்ள வர்கள் தக்க பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சில சிரமங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு என்றாலும், நிர்வாகத்திடம் கேட்ட சலுகை, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் செலவு வகையில் திட்டமிட்டு குடும்ப நிர்வாகத்தை மேற்கொண்டு பணம் சேமிப்பர். கணவரின் அன்பு மனதிற்கு மகிழ்ச்சி தரும். தாய்வழியில் உதவி கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் உடல் நல பாதுகாப்பில் தகுந்த அக்கறை காட்டுவது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தை வாய்ப்பு கிடைத்து நல்ல லாபம் காண்பர்.
மாணவர்கள்: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவம், சட்டம், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், பயோ கெமிஸ்ட்ரி துறை மாணவர்கள் மந்தநிலை காரணமாக படிப்பில் பின்தங்க நேரலாம். மற்றவர்களும் சுமாராகவே படிப்பர். படிப்புக்கான பணவசதிக்கு குறை இல்லை. சக மாணவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். விளையாட்டு பயிற்சியின் போது தகுந்த பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள்: செல்வாக்கு அதிகரிக்கும். ஆதரவாளர்கள் உங்களிடம் அதிக நம்பிக்கை கொள்வர். மறைமுக எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பீர்கள். யார் எதுசொன்னாலும் கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மனதிற்கு சரி என பட்டதை மட்டும் செயல்படுத்துங்கள். புத்திரர்களைன் அரசியல் பணியில் அளவோடு ஈடுபடுத்துவது நன்மை தரும். அரசியலோடு தொழில் நடத்துபவர்கள் திறமையுடன் பணியாற்றி வருமானத்தை பெருக்கிக் கொள்வர்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான அனைத்து உதவிகளும் எளிதாக கிடைக்கும். மகசூல் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். கால்நடை வளர்ப்பில் சுமாரான லாபம் உண்டு. நவீன உழவுக்கருவிகள் வாங்கும் யோகம் உண்டு. நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் : துர்க்கை
பரிகார பாடல்
உடையானை ஒல்கு செம்பட்டு உடையாளை
ஒளிமதி செஞ்சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை
தயங்கும் நுண்ணூல் இடையாளை
எங்கள் பெம்மான் இடையாளை
இங்கு என்னை இனி படையாளை
உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே!

No comments:

Post a Comment