Oct 12, 2010

தனுசு ராசி அன்பர்களே! சனி பெயர்ச்சி

தனுசு ராசியில் பிறந்த நீங்கள் எடுத்த எந்தக் காரியத் தையும் திறமையுடன், வெற்றியுடன் முடிப்பீர்கள். மற்றவர்க்கு மரியாதை கொடுப்பீர்கள். ஆனால் யாருக்கும் கீழ்படிந்து அடிமையாவது பிடிக்காது. கள்ளம், கபடமின்றி எல்லாரிடத்திலும் உள்ளன்புடன் பழகுவீர்கள். வெளிப்படையாக மனதில் இருப்பது உதட்டில் வெளிவரும். சிலநேரங்களில் வெகுளித் தனமாகவும் பேசுவீர்கள். கடவுளிடத்தில் அந்தரங்க மாக ஆத்மார்த்தமான பக்தியைக் கொண்டிருப்பீர் கள். கோபத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகள் சமயத் தில் கூரிய அம்புபோல பாயும். உங்களுக்குத் தெரிந் ததை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என நினைத்து கற்றும் கொடுப்பீர்கள். தீயவர்களுடன் நட்புகொள்ள மாட்டீர்கள். பிடிவாதம், வேகம், கோபம் கொண்டிருப்பீர்கள். விளையாட்டு உடற் பயிற்சிகளில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வருங் காலத்தை முன்கூட்டி உரைக்கும் தீர்க்கதரிசன உள்ளுணர்வு சக்தி கொண்டிருப்பீர்கள்.

கருத்தரங்கு, வழக்காடு மன்றம் போன்ற கூட்டங் களில் சுவைபட மணிக்கணக்கில் பேசுவீர்கள். செல் வாக்கு உண்டு. சகோதர விருத்தி குறைவு; ஒற்றுமையும் குறைவு. சிறு வயது முதலே சகோதரன் மேல் இனம் தெரியாத வெறுப்பு இருக்கும். இளவயது முதலே சுயதொழில் செய்யவே ஆர்வம் இருக்கும். சிரமம் இருந்தாலும் நேர்மையான வழியில் பணம் சேர்க்கவே ஆசைப்படுவீர்கள். குறைந்த உழைப்பில் நிறைந்த லாபம் பெறும் தொழில்களைச் செய்யவே ஆசைப்படு வீர்கள். தாய்க்கு உங்கள்மீது பாசம் அதிகம். கல்வியை விட உயர்ந்த ஞானமும் தெளிந்த அனுபவமும் மிகுதியாக இருக்கும். கல்வியில் பெரிய படிப்பு பயில இயலாமல் தடை ஏற்படும். படிப்புக்குத் தகுதியான வேலை கிடைக் காது. கற்பனை அதிகம். அதனால் உங்கள் வாழ்க்கைத் துணைவியும் தொழிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என கற்பனை செய்து உருவம் தருவீர்கள். ஆனால் நடைமுறையில் நடைபெறாமல் ஏமாற்றம் அடையலாம். புத்திரர் சந்ததி அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு புத்திர பாக்கியமே இருக்கும். அதற்காகக் கவலைப்படமாட்டீர்கள்.



எதையும் விளையாட்டுப் போக்கில் எடுத்துக் கொள்ளும் உள்ளம் கொண்டவர் என்பதால் எதற்காகவும் கவலைப்பட மாட்டீர்கள். வயிற்றுக் கோளாறு, நீரினால் ஏற்படும் பிணிகள், வாயு சம்பந்தமான நோய் சில சமயம் தோன்றி துன்பப்படுவீர்கள். கடன், நோய், எதிரி களால் வம்பு, வழக்கு இவற்றில் ஏதேனும் ஒன்று நிரந்தரமாக இருக்கும். சட்ட விரோதமாகத் தீய வழிகளில் சென்று பணம் சம்பாதிக்க மாட்டீர்கள். நீதித்துறை மற்றும் மருத்துவத் துறைகளில் இருப்பவர்கள் அநேகர் உங்கள் லக்னமே! தகப்பனாருடன் ஒற்றுமை குறைந்து காணப்படும்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருந்த சனி பகவான் உங்களுக்கு நற்பலனைத் தந்தார். கணவன் - மனைவி இடையே சுமூகமான உறவு இருந்தது. செய்தொழிலில் சில பிரச்சினைகள் இருந்தாலும் லாபங்களும் இருந்தது. மூத்த சகோதரர்களால் ஆதரவும் உதவியும் கிடைத்தது. வெளியூர் பயணங்களால் கௌரவமும் அந்தஸ்தும் கிடைத்தது. அதிக அலைச்சலும் சோர்வும் உண்டானது. தாயாருக்குச் சிறு சிறு உடல் நலக் குறைபாடுகளும் இருந்தது. சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போய் சம்பாதித்தார்கள். தந்தைக்கு அலைச்சலும் நன்மைகளும் இருந்தது. கௌரவம் பாதிக்காத வகையில் நடந்து கொண்டீர்கள்.

இனி சனிபகவான் உங்களது ராசிக்குப் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி செய்கிறார். பாவகிரகம் கேந்திரம் பெறுவது நல்லது. செய்தொழிலில் மதிப்பும் மரியாதையும் உயரும். நிலையான தொழில் அமைய வழி உண்டாகும். விலகிச் சென்றவர்கள் தானாகவே தேடி வருவார்கள். முன்பிருந்ததைவிட தற்போது மதிப்பு கூடும். மனதில் திட்டமிட்ட காரியங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். இருப்பினும் இறுதியில் வெற்றி உண்டாகும். அன்னிய இன, மதத்தவரால் உதவியும் ஆதரவும் கிடைக்கும். தாயாருக்கு உடல் நிலை சிறப்பாக இருக்கும். முன்பிருந்ததைவிட தற்போது ஆரோக்கியமாக இருப்பார். வீடு, வண்டி வாகனம், கால்நடைகளால் வருவாயும், இரும்பு சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சொந்தங்களால் பெரும் உதவியை எதிர்பார்க்க முடியாது. பொருளாதார நிலை ஓரளவு திருப்தி அடையும் வகையில் இருக்கும்.



உங்களுடைய வழக்கமான சிரிப்பால் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பலரும் வியக்கும்படி உங்களுடைய தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். குழந்தை களுக்கு அவ்வப்போது நீர் சம்பந்தமான வியாதி உண்டாக வாய்ப் புண்டு. வியாதி வந்தாலும் உடனுக்குடன் அது தீர்ந்துவிடும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உங்கள்மீது பொறாமை கொண்டு உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். உத்தியோகத் தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வும், பல சலுகைகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் பெருமையும் மதிப்பும் உயரும்.

மூத்த சகோதரர்களால் செலவுகளும், சில வாக்குவாதங்களும் உண்டாகும். உங்கள் மனம் சங்கடப்படும்படி நடந்து கொள்வார்கள். தந்தைக்குச் செல்லுமிடங்களில் மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் சிரமப்படுவார். இருந்தாலும் எப்படியாவது வாக்கைக் காப்பாற்றிவிடுவார். குடும்பத்தில் அவ்வப் போது சில சலசலப்புகள் ஏற்பட்டு மறையும். வெளியில் வாங்கிய கடனை படிப்படியாக அடைத்துவிடுவீர்கள். மேலும் கடன் வாங்கவும் முயற்சி செய்வீர்கள். கடன் வகையில் பிரச்சினை வராமல் தடுக்கலாம்.

சில மரியாதைக் குறைவு நிகழ்வுகளும் நடைபெற வாய்ப்புண்டு. பூர்வீகச் சொத்துக்கள் பாகப்பிரிவினையாக வாய்ப்பு உண்டு. இதில் சில சங்கடங்களும் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்துவந்தால் நற்பலன்கள் உண்டாகும். திருமண விஷயத்தில் சில தடைகள் இருந்தாலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலை தேடுவோர்க்குத் தகுதிகேற்ப நல்ல உத்தியோகம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்ய முயற்சி செய்பவர்கள் அதற்கான வேலையில் ஈடுபட வழி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளிட மிருந்து பரிசும் பாராட்டும் கிடைக்கும். செய்தொழிலில் அலைச்சலும் இருக்கும். அலைச்சலுக்குத் தகுந்த ஆதாயமும் இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களால் அனுகூலமும் லாபமும் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்துடன் தெய்வ ஸ்தலங்களுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

குடியிருக்கும் இடங்களில் சில மாற்றங்கள் செய்ய எண்ணுவீர்கள். சிலருக்குச் செய்தொழில் இடமாற்றமோ அல்லது தொழில் மாற்றமோ உண்டாக வாய்ப்புண்டு. போட்டி, பந்தயங்களில் சில தோல்விகள் உண்டாகலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு மக்களின் ஆதரவும், சில கௌரவப் பதவிகளும் கிடைக்க வழியுண்டு. மேலிடத்தில் உள்ளவர் களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் தடைப் பட்ட சுப காரியங்கள் தற்போது தடையின்றி சிறப்பாக நடக்கும். புதியவர்களின் நட்பும் அன்பும் கிடைக்கும். வீடு, வாகனம், நிலம் ஆகியவை வாங்கவும் வாய்ப்புண்டு. நிலையான அசையாச் சொத்துக்கள் சேரவும் அதிக வாய்ப்புண்டு.

சனி பகவான் 3-ஆம் பார்வையாக உங்களது ராசிக்குப் பன்னிரண் டாம் இடமான விரயஸ்தானத்தைப் பார்ப்பதால் வீடு, வாகனங் களுக்குச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகலாம். இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் அடிக்கடி கண்விழிக்கும் சூழ்நிலை உண்டாகும். பணவரவு ஒருபுறம் இருந்தாலும் வரும் பணத்தைச் சேமித்து வைக்கமுடியாத நிலை உண்டாகும். தந்தைக்கு உடல் நலக்குறைவால் மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

சனி பகவான் ஏழாம் பார்வையாக உங்களது ராசிக்கு நான்காமிட மான சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் வீடு, வாகனம் விருத்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளிடமிருந்து நற்பெயரும் பாராட்டும் கிடைக்கும். தாயாருக்கு உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வி, மேற்படிப்பு பயிலவும் வாய்ப்பு கூடிவரும். வியாபாரம் நல்ல லாபத்துடன் இருக்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கவும் வாய்ப்புகள் தேடிவரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

சனி பகவான் 10-ஆம் பார்வையாக உங்களது ராசிக்கு ஏழாமிடமான களஸ்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக வாய்ப்புண்டு. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உறவினர்களால் தொல்லை இருக்காது. கெட்டவர்களின் நட்பு தானாகத் தேடி வரும். ஆதலால் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் சிலருக்கு இருதார யோகம் அமையும்.

உத்திர நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

தனுசு ராசிக்கு ஒன்பதுக்குடைய சூரியன் சாரத்தில் உத்திர நட்சத்திரத்தில் 2009- செப்டம்பர் முதல் பத்து மாத காலம் சனி சஞ்சாரம் செய்வார். சூரியனும் சனியும் பகை கிரகம். ஆனாலும் இப்போது தற்காலிக நட்புக் கிரகமாவதால் உங்களுக்குப் பூர்வீகச் சொத்து அல்லது தந்தை வழி பிரச்சினைகள் தீர்ந்து நன்மை உண்டாகும். தந்தை பிள்ளை வகை நட்பு, உறவு பலப்படும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு நாணயம் காப்பாற்றப்படும். தேகநலனிலும் முன்னேற்றம் தெரியும்.

அஸ்த நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2010- ஜூலை முதல் 14 மாத காலம் தனுசு ராசிக்கு அட்டமாதிபதி யான சந்திரன் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தேகநலத்தில் பாதிப்பும் கவலையும் வைத்தியச் செலவும் உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் தேக சுகமும் கவலை நிவர்த்தியும் உற்சாகமும் உண்டாகும். வாழ்க்கையில் வளமும் நலமும் பெருகும். பிதுர்வகையில் ஏமாற்றமும் விரயமும் ஏற்படலாம்.


சித்திரை நட்சத்திரத்தில் சனி சஞ்சாரப் பலன்

2011- செப்டம்பர் முதல் ஆறு மாத காலம் தனுசு ராசிக்கு 5, 12-க்குடைய செவ்வாயின் சாரத்தில் சனி சஞ்சாரம் செய்வார். உங்கள் ஆசைகளும் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உருவாகும். பிள்ளைகளுக்கு சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். சிலருக்குத் தொழில் மாற்றம், வேலை மாற்றம், வீடு மாற்றம் போன்ற அமைப்புகளும் உருவாகும். அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி ஏற்றம் தரும் மாற்றமாக அமையும். உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் பணி புரிகிறவர்களுக்குத் தனி செல்வாக்கும் இனிய எதிர்காலமும் அமையும். வீடு, மனை பாக்கியமும் திருமணம், புத்திர பாக்ய யோகமும் உண்டாகும்.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சி நீண்ட கால கனவுத் திட்டங்களை நிறைவேற் றும். தொழில், உத்தியோகத்தில் செல்வாக்கு, வளர்ச்சியை உருவாக்கும். விரும்பிய இடப் பெயர்ச்சி அமையும். பிள்ளைகளின் ஆதரவும் அன்பும் ஒத்துழைப்பும் மனதுக்கு ஆறுதலையும் நிறைவையும் ஏற்படுத் தும். மனநிறைவும் மகிழ்ச்சியும் உங்கள் நோயை விரட்டியடித்து உற்சாகத்தை உருவாக்கும்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு...

இந்த சனிப் பெயர்ச்சியில் கெடுதல் ஏதுமில்லை என்றாலும் நன்மைகள் தாமதமாகும். அதனால் டென்ஷன் உண்டாகும். மனைவி- மக்கள் - குடும்பத்தார் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாகக் கற்பனை பயமும் விரக்தியும் அடையலாம். சனி பிற்பகுதியில் எல்லா சங்கடங்களும் நீங்கிவிடும்.

பரிகாரம்

மதுரை - திண்டுக்கல் வழித்தடத்தில் காந்திகிராமம் அருகில் சின்னாளப்பட்டியில் அஞ்சலி ஆஞ்சனேயர் கோவில் உண்டு. இது சாளக்கிராமத்தில் வடிவமைக்கப்பட்ட சிலை. அங்கு சென்று வழி பட்டால், சனி பகவான் சங்கடம் போக்கி சஞ்சலம் நீக்கி சந்தோஷத்தைக் கொடுப்பார்.

No comments:

Post a Comment