Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மிதுனம்




மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
வீடுவாங்கும் யோகம், - குடும்பத்தில் பிரச்னை


பொறுமையைக் கடைபிடித்து வெற்றி பெறும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசியில் கேது, 4ல் சனி, 7ல் ராகு என்கிற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே2 )முதல் ஐப்பசி 21 (நவ.7)வரை மீனராசியில் பிரவேசிக்கிறார். குருவின் நிலை நடைமுறை வாழ்வில் பெற வேண்டிய சில நல்ல பலன்களை தாமதப்படுத்தும். மனதில் தெய்வ சிந்தனை வளரும். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகி விலகும். வீடு, வாகன வகையில் தேவையான மாற்றங்களை திருப்திகரமாக செய்வீர்கள். தாயின் அன்பும் ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்தில் பெறும் வருமானம் பராமரிப்பு பணிகளில் செலவழியும். புத்திரர்கள் உங்களின் எண்ணங்களை நிறைவேற்றுவர். இஷ்ட, குலதெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். மறைமுக எதிரிகள் சித்திரை முதல் ஐப்பசி வரை உள்ள காலகட்டத்தில் தாமாகவே விலகிச் செல்வர். இதனால் உங்கள் மனச்சுமை குறையும். ஆன்மிகத்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு உண்டாகும். மகான்களின் அன்பும் ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்டநாளாக நிறைவேறாமல் இருந்த நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். நாள்பட்ட நோய்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதால் நோய் நிரந்தரமாக குணமாகும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனதுடன் செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு நிம்மதி குறையும். நிலுவைப்பணம் வசூலிப்பதில் அனுகூலம் ஏற்படும். நண்பருடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதும் தகுதிக்கு மீறிய பண பரிவர்த்தனையும் கூடாது. சரியான சந்தர்ப்பங்களில் மூத்த சகோதரர்களின் ஆலோசனையும் உதவியும் கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த கடன் கிடைக்கப் பெறுவீர்கள். வீடு வாங்கவோ, கட்டவோ யோகம் உண்டு. சிலர் பழைய வீடுகளில் மராமத்து பணிகளை மேற்கொள்வர்.
தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், ஓட்டல், லாட்ஜ், மருத்துவமனை, சுற்றுலா நிறுவனம், டிராவல்ஸ் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமான பொருட்கள், தண்ணீர் சார்ந்த தொழில், இரும்பு, பிளாஸ்டிக், காகிதம், ரசாயனப்பொருள் உற்பத்தி செய்வோருக்கு லாபம் நன்றாக இருக்கும். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி மாதங்களில் உற்பத்தியை பெருக்குவதில் தகுந்த கவனம் தேவை. பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு வர்த்தகத்தில் லாபம் பெருமளவில் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் களின் வரவேற்பு கிடைக்கும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை, காகிதம், உணவுப் பண்டங்கள், பர்னிச்சர், மருந்து, பூஜை பொருட்கள், தண்ணீர் சார்ந்த பொருட்கள், பாத்திரங்கள், தானியம் விற்பவர்கள் அபரிமிதமான வளர்ச்சி காண்பர். லாபம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு இவர்களையும் விட நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் சார்ந்த சங்கங்களில் சிலருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். சரக்கு வாகனங்களாலும் லாபம் உண்டு. ஆனால், வாகன பராமரிப்பு செலவும் அதிகரிக்கும். சரக்கு கொள்முதல் கடனை பெருமளவில் அடைத்துவிடுவீர்கள்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிலுவைப் பணிகளை கண்டறிந்து நிறைவேற்றி, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். புதிதாக சில சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்துகொள்வர். வங்கி, பதிவேடு பராமரிப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் பணிகளில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத சிரமங்களில் சிக்கிக்கொள்ள நேரிடும். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற தாராள பணவசதி கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணியை செய்துமுடிக்க ஆர்வம் காட்டவேண்டும். பணியிட மாற்றம், கூடுதல் வேலைப்பளு ஆகியவை குருவின் அதிசார காலத்தில் உண்டாகும். தாய்வழி உறவினர் களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். சுயதொழில் நடத்தும் பெண்கள் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி காண்பர். பணவரவும் சீராக இருக்கும்.
மாணவர்கள்: வங்கியியில், மருத்துவம், சட்டம், விவசாயம், ரசாயனம், இன்ஜினியரிங், ஆசிரியர் பயிற்சி, ஜர்னலிசம், கேட்டரிங், கம்ப்யூட்டர், தகவல்தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் இவர்களை விட சற்று குறைந்த மதிப்பெண் பெறுவர். படிப்புக்கான பணவசதி நன்றாக இருக்கும். படிப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற விவாதங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. பெற்றோருடைய அன்புக்கு ஆளாவீர்கள். சுற்றுலா பயண அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களிடம் தேவையற்ற விஷயங்களைப்பற்றி விவாதம் செய்தல் கூடாது. புதியவர்களை மனமுவந்து வரவேற்று ஆதரிப்பீர்கள். இதனால் உங்கள் மதிப்பு உயரும். எதிரிகளால் இருந்த தொல்லை குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் பெருமளவில் குறையும். அரசியல் பணியில் புத்திரர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள்பணக்கடன் பெற்று அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவர்.
விவசாயிகள்: பயிர் வளர்ப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மகசூல் சிறந்து தாராள பணவரவு உண்டாகும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு லாபம் உண்டு. நிலம் தொடர்பாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு கூடுதல் நிலம் வாங்கும் யோகம் உண்டு.
வணங்க வேண்டிய தெய்வம்: திருப்பதி வெங்கடாஜலபதி
பரிகார பாடல்
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவில் படிவாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

No comments:

Post a Comment