Mar 1, 2011

மேஷம் 01-01-2011 முதல் 31-12-2011 வரை







எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடந்தேறும் .இதுவரை நடக்காமல் காலம் தாழ்த்தி வந்த நல்ல காரியங்கள் நடந்தேற வாய்ப்பு ஏற்படும் . அதிக உழைப்பு அதற்கேற்ற நல்ல வருமானமும் ஈடுபட வாய்ப்பு ஏற்படும் .

பேச்சில் எப்பொழுதும் கவனம் தேவை .எடுத்த காரியங்களில் வெற்றி கிட்ட கடுமையான உழைக்க வேண்டி வரும் .புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .உடன் பிறப்புகளால் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும் .உறவினர்களை விட்டு பிரிய நேரிடும் அல்லது நெருங்கிய உறவினர்களால் இழப்பு ஏற்படும் .

இடம் , மனை , விடு , விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் . தாயாரால் ஒரு சிலருக்கு நன்மை ஏற்படும் . கல்வியால் எதிர்பார்த்த நற்பலன் ஏற்படும்.

இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இவ்வாண்டு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும் .காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் . கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும் .சமுக சேவைகள் செய்ய பிரியம் ஏற்படும் . அதனால் பெயர் புகழ் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிட்டுவது கடினம் ஆகும்.

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் .ஒரு சிலருக்கு வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் .ஒரு சிலருக்கு அடிக்கடி கம்பெனி மாறி கொண்டே இருப்பார்கள் .அதே சமயம் பார்க்கும் வேலையில் முயற்சி இல்லாமல் ஒரு சிலர் வேலையை இழக்கவும் சந்தர்ப்பம் அமையும் . எனவே பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை .மேலும் உடல் ஆரோக்யத்தில் மிக கவனம் தேவை .உடலில் அடிவயிறு ,கை ,முதுகு போன்ற பகுதிகளில் நோய் ஏற்பட்டு விலகும். ஒரு சிலருக்கு நரம்புதளர்ச்சியும் ,ரத்த கொதிப்பு போன்ற நோய்களும் வர வாய்ப்பு இருப்பதால் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை .அதிக அளவு வருமானமும் வருமானத்திற்கு மேல் அதிக அளவு கடனும் ஒரு சிலர் வாங்குவார்கள் .ஒரு சிலர் புதுக்கடனை வாங்கி பழைய கடனை அடைப்பர்.

புதிய தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு அமையும் .நல்ல கணவன் ,மனைவி அமைய வாய்ப்பு அமையும் .திருமணம் ஆன உடனே ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் .வழக்குகள் இழுத்தடித்து கொண்டே போகும் .ஒரு சிலர் தோல்வியை சந்திக்க நேரிடும் .ஒரு சிலர்க்கு உயர் கல்வியில் தடை ஏற்பட்டு பின் கல்வி தொடர வாய்ப்பு அமையும்.

போக்குவரத்து வண்டி வாகனக்களில் மிக அதிக கவனம் தேவை .நாள்பட்ட நோய்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும் .அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமையும் .ஒரு சிலர்க்கு கணவன் ,மனைவி அல்லது முன்னோர்களின் சொத்துகள் கிடைக்க வாய்ப்பு கிட்டும்.

முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்க சிலர்க்கு வாய்ப்பு அமையும் .ஒரு சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிட்டும். ஒரு சிலர்க்கு வெளிநாட்டில் வேலை மற்றும் அங்கேயே படிப்பு தொடரும் .ஆன்மிக பயணம் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .நீண்ட தூரம் ஸ்தல யாத்திரை செல்ல சந்தர்ப்பம் கிட்டும் .அடிக்கடி ஆலய தரிசனம் அமையும் .மகான்களின் தரிசனம் கிடைக்க சந்தர்ப்பம் அமையும் .

அரசு மற்றும் தனியார் துறைகளில் நல்ல வேலையில் அமைய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .இதுவரை நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும் .வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் கிட்டும்.

விவசாயத்தை பொறுத்தவரை ஓரளவு சுமாரான லாபம் தான் கிட்டும் .ஆரம்பத்தில் சிறிதளவு நஷ்டம் ஏற்பட்டாலும் பின் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிட்டும் .மருத்துவம் ,பொறியியல் ,ஆசிரியர்கள் நிதித்துறையில் இருப்பவர்கள் சமயம் மற்றும் தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் ,மதகுருக்கள் ,ஜோதிடர்கள் ,வங்கியில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர். தகவல்த்துறை,போக்குவரத்து ,விமானத்துறை ,கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல வருமானம் புகழ் பெறுவர் .

ஓட்டல் ,அச்சு தொழில் ,ரியல் ஸ்டேட் துறை சுமாராகத்தான் இருக்கும். பெரிய அளவில் முதலிடு செய்வதில் கவனம் தேவை .மேலும் எலெக்ட்ரிக்கல் ,எலெக்ட்ரானிக்ஸ் ,இன்ஜினியரிங் தொழில் சிறப்படையும் . தோல் ,ரசாயனம் ,ஜவுளி ,ஏற்றுமதி ,இறக்குமதி சுமாராக இருக்கும்.ஆடை,ஆபரண தொழில் ,பிளாஷ்டிக் பொருள் உற்பத்தி செய்வோர் மற்றும் நடை பாதை வியாபாரம் செய்வோர் பெரிய அளவில் முதலிடு செய்தல் கூடாது .பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலிடு செய்ய சந்தர்ப்பம் அமையும்.

எம் பெருமான் முருகப் பெருமாளையும் ஸ்ரீ மஹா லஷ்மியையும் வணங்கி வர நற்பலன்கள் கூடும் . எண்ணிய எல்லாம் நல்ல படியாக நடந்தேறும் .
மேலும் இங்கே தொடர்க...

ரிஷபம் 01-01-2011 முதல் 31-12-2011 வரை


எப்பொழுதும் புன்சிரிப்பும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் உங்களுக்கு இந்த புத்தாண்டு ஓரளவு நல்ல பலன்களை வழங்க காத்திருக்கிறது . உங்களது தனித்தன்மை இவ்வருடம் பிரகாசிக்கும் .எப்பொழுதும் புது முயற்சியும் புதிய விஷயங்களை கற்பதிலும் ஆர்வம் திறமையும் அதிகரிக்கும் .எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்கும் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும் .இதுவரை நடக்காமல் தள்ளிப்போன நல்ல விஷயங்கள் இவ்வருடம் நடக்க வாய்ப்பு அமையும் .

பேச்சில் சாமத்தியம் கூடும் .ஆரம்பகல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் உயர் கல்வி பயிலுபவர்கள் மட்டும் படிப்பில் மிக அதிக கவனம் தேவை .இடையில் தடங்கள் ஏற்பட்டு பின் கல்வி தொடர வாய்ப்பு அமையும் .எவ்வளவு சம்பாதித்தாலும் இவ்வருடம் பெரிய அளவில் சேமிப்பை தராது .எதிலாவது முதலிடு செய்ய வேண்டிவரும் .ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தனவரவு பொருள் வரவு கிட்டும்.

புதிய தொழில் தொடங்க ஒரு சிலர்க்கு சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறப்புகளால் நன்மையும் அவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும் . உடன் பிறந்தவர்களுக்கு சுப காரியம் நடக்க வாய்ப்பு அமையும். இடம் ,பொருள் , வீடு , மனை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் வரும் பொழுது கவனமாக பார்த்து வாங்கவும் .சொத்து வாங்குவதில் கவனம் தேவை .வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக சென்று வரவும் .புதிய வண்டி வாங்குவதற்கு பதில் பழைய வண்டி வாங்குவது ஒரு சிலர்க்கு நன்மை பயக்கும் .தாயாரால் ஒரு சிலர்க்கு மன வருத்தமும் ,நிம்மதியும் கெடும்.

காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் , சந்தோஷகரமாகவும் அமையும் . ஒரு சிலர்க்கு காதல் கனிந்து திருமணம் நடக்கும் . குழந்தை பேறு இல்லாதவர்கள் பரிகாரம் செய்ய குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு குழந்தைகளால் மனவருத்தமும் அவர்களால் அவமானமும் , பிரச்சனைகளும் ஏற்படும். பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் கவனமாக முதலிடு செய்யவும் . ஆரம்பத்தில் லாபம் ஏற்பட்டாலும் இறுதியில் முதலை இழக்க நேரிடும் . எனவே கவனமாக முதலிடு செய்யவும் . தொண்டு நிறுவனங்கள் , சமுக சேவகர்கள் பொது வாழ்க்கையில் கவனம் தேவை இல்லையேல் அசிங்கப்பட நேரிடும். அரசியலில் இருப்பவர்கள் மிக அதிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் இல்லையேல் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போக கூடும் .எனவே கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . கலை துறையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வருமானம் , பெயர் , புகழ் அந்தஸ்து கிட்டும் .

இதுவரை வேலை கிடைக்காமல் அலைந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் .நல்ல பெயர் போன கம்பனிகளில் வேலை செய்ய சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலர்க்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . சிலருக்கு வெளிநாட்டில் வேலை அங்கேயே மேல் படிப்பு அமையும் . அடுத்தடுத்து நல்ல கம்பெனிக்கு வேலைக்கு செல்ல சந்தர்ப்பம் அமையும் . வேலையில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும் . பார்க்கும் வேலையில் திருப்தி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் . வராத பணம் , கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரும் . எதிர்பார்த்த இடங்களில் கேட்டவுடன் பணம் கடன் கிடைக்கும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை .உடலில் அடி வயிறு , முழுங்காலுக்கு கீழ் உள்ள பாகங்கள் ,கண் ,கல்லீரல் இவற்றில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை உடனடியாக பார்த்தால் நலம் .

இதுவரை தள்ளி போன திருமணங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படும் .எதிரிகள் விஷயத்தில் மிக அதிக கவனம் தேவை .உடன் பணிபுரிபவர்களிடம் மிக கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும் . உயர் அதிகாரிகளிடம் கவனமாக இல்லையேல் அவர்களால் பிரச்சனைகள் ஏற்படும் .வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தராது .வெற்றி ஏற்பட்டாலும் நிலையான வெற்றியாக இராது . அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு தொல்லைகளும் ,பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு அமையும் .எனவே கவனம் தேவை . பட்டமேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு படிக்க ஒரு சிலர்க்கு வாய்ப்பு அமையும் .வெளிநாடு செல்ல தடையாக இருந்த விசா விரைவில் வந்து வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும் .அடிக்கடி தெய்வ தரிசனம் ஆலய தரிசனம் அமையும் .பார்க்கும் வேலையை விடுதல் கூடாது .வேலையில் அடிக்கடி விடுமுறை கூடாது . நண்பர்களால் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும்.

உற்பத்தித்துறை ,விவசாயத்துறை எதிர்பார்த்த நற்பலன்களை தருவதில் கால தாமதம் ஏற்படும். ஆடை ,ஆபரண அழகு சாதனத்துறை எதிர்பார்த்த பலன்கள் கிட்டும் ,ஓட்டல் உணவுப்பொருள்,பால் ,பழம் , காய்கறி வெள்ளி ,வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற இனங்களில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் .எலெக்ட்ரிக்கல் ,எலெக்ட்ரானிக்ஸ் ,தகவல்துறை ,போக்குவரத்து ,செய்தித்தொடர்பு ,விமானத்துறையில் எதிர்பார்த்த பலன்களை அனுபவிப்பார் .பள்ளி ,கல்லூரி ,பல்கல்லைக் கழக ஆசிரியர்கள் ,ஊழியர்கள் நற்பலன் அடைவர் சிறு வியாபாரம் செய்பவர்கள் ,ரோட்டோரம் தொழில் புரிபவர்கள் நற்பலன் அடைவர் .

புதன் கிழமை தோறும் ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் ,சந்திர மௌலீஸ்வரரையும் , வணங்கி வர நற்பலன்கள் ஏற்படும். எண்ணிய எல்லாம் இனிதே நடந்தேறும்.
மேலும் இங்கே தொடர்க...

மிதுனம் 01-01-2011 முதல் 31-12-2011 வரை









எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடைய உங்களுக்கு இவ்வருடம் எதிர்பார்த்த நற்பலன்கள் நடந்தே தீரும் .இதுவரை ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி நற்பலன்கள் கூடும்.உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் .மேலும் புதிய விஷயங்களை கற்பதிலும் புதிய முயற்சிகளிலும் துணிந்து ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள் .வெற்றியை மட்டுமே குறிகோளாகக் கொண்டு செயல்பட்டு இறுதியில் வெற்றியை மட்டுமே அடைவிர்கள் .

பேச்சில் சாமர்த்தியசாலிகளான நீங்கள் அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கவும் வில்லங்கமான வார்த்தையால் பிரச்சினைகள் ஏற்பட்டு அவமானப்பட நேரிடும் .எனவே அதிகமாக பேசுவதை தவர்க்கவும் இல்லையேல் நன்கு யோசித்து பேசி செயல்படவும் .உடன் பணிபுரிபவர்களிடமும் மேலதிகாரிகளிடமும் கவனமாக பேசி பழகுதல் வேண்டும் .

புதிய தொழில் தொடங்க ஒரு சிலர்க்கு சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறந்தவர்களால் நற்பலன்கள் ஏற்படும். உடன் பிறப்புகளுக்கு தள்ளிபோகும் சுப காரியம் ஒரு சிலருக்கு நடக்க வாய்ப்பு அமையும் .பகுதிநேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ கல்வி கற்க வாய்ப்பு அமையும் .அடிக்கடி நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையும் .அதன் முலம் வெற்றி கிடைக்கும் .உறவினர்களால் எதிர்பார்த்த நற்பலன் அமைய வாய்ப்பு கிட்டும்.

இடம்,மனை,வீடு,வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் .கடன் வாங்கி வீடு ,வண்டி வாகனம் வாங்க யோகம் ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் .தேர்வில் நல்ல மதிப்பெண் அமைந்து எதிர்பார்க்கும் கல்லூரி கிடைக்க சந்தர்ப்பம் அமையும் .தாயாரால் நன்மை ஏற்படும் .

குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கட்செல்வம் கிடைக்கும் . குழந்தைகளுக்கு இதுவரை தள்ளி போன சுப காரியம் நடந்தேறும் .ஒரு சிலர்க்கு குழந்தைகளால் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் . குழந்தைகளால் எதிர்பார்த்த லாபம் கிட்டும் .குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . கலைத்துறையில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும் .கலைகளால் பெயர் , புகழ் , நல்ல வருமானம் ஏற்படும். பங்கு சந்தையில் ஆரம்பத்தில் லாபம் ஏற்படினும் நடுவில் சிறிது தொய்வு ஏற்பட்டு வருட இறுதியில் நல்ல லாபம் ஏற்படும் காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் ,சந்தோஷகரமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு காதலில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் .அடிக்கடி உல்லாச பயணம் செல்ல வாய்ப்பு அமையும்.

இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . பார்க்கும் வேலையில் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும் .பார்க்கும் வேலையில் ஒரு சிலருக்கு மாற்றம் ஏற்படும் . வேலை பிடிக்காமல் அல்லது கம்பெனி பிடிக்காமல் ஒரு சிலர் வேறு கம்பெனிக்கு மாறக்கூடும் .போட்டிதேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டிவரும் .நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும் . கடன் வாங்குவதில் தடை ஏற்பட்டு ஒரு சிலருக்கு கடன் கிடைக்கும் உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை . குறிப்பாக பெண்கள் அதிக அளவில் உடல்நலத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். உடலில் அடிவயிறு , தலை , முழங்கால் பகுதிகளில் நோய் ஏற்பட்டு விலக சந்தர்ப்பம் உண்டு .

இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு இருந்தாலும் ஒரு சிலருக்கு மன வாழ்க்கையில் எதிர்பார்த்த இனிமை இராது . வழக்குகள் இழுப்பறியுடன் காணப்படும் . வழக்குகளில் வெற்றி அடைய கடும் போராட்டமே நடத்த வேண்டி வரும் . உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் . தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது . தந்தையாரால் ஆதாயமும் ஒரு சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். அரசாங்கத்தால் ஒரு சிலருக்கு துன்பமும் துயரமும் அமையும்.

உயர் கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . வெளிநாடு வெளிமாநிலங்கள் செல்ல வாய்ப்பு அமையும். ஆலய மற்றும் தெய்வ தரிசனங்கள் கிட்டும். அதனால் நன்மை ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பார்ப்பார் . சுயதொழில் , சிறுதொழில் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் .

தகவல் தொடர்பு , போக்குவரத்து , சாப்ட்வேர் மற்றும் ஆடிட்டர் போன்ற துறைகளில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . மருத்துவம் , பொறியியல் , ரசாயனம் இத்துறையில் இருப்பவர்கள் கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் .

ஜவுளி , கண்ணாடி , ஓவியம் , இசை , நடனம் , நாட்டியம் , சின்னத்திரை , பெரியதிரையில் இருப்பவர்கள் புகழ் பெறுவர் . பால் மற்றும் தண்ணீர் சார்ந்த பொருட்களை விற்பவர்கள் , பழங்கள் , காய்கறிகள் , பூக்கள் , மீன்பிடித்தொழில் புரிபவர்கள் , ரியல் எஸ்டேட் , ப்ரோக்கர்கள் , வணிகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர் . வணிகர்கள் , விவசாயிகளுக்கு விவசாயத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும் .

எலெக்ட்ரிக்கல் , எலக்ட்ரானிக்ஸ் , அழகுசார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வோர் அதில் ஈடுபடுவோர் நல்ல லாபம் ஈட்டுவர் . ஓட்டல் , நகை மற்றும் ஆபரண பொருட்கள் உற்பத்தி செய்வோர் மற்றும் அதை விற்பவர்கள் நல்ல லாபம் ஈட்டுவர் .

அவரவரது குலதெய்வ வழிபாடும் ஸ்ரீ மகாலெஷ்மியையும் வழிபட நற்பலன்கள் மிகும் . வேளாங்கண்ணி சென்று மாதாவை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் பூர்த்தியாகும் .
மேலும் இங்கே தொடர்க...

கடகம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை










எப்பொழுதும் உழைப்பும் மகிழ்ச்சியும் வெற்றியும் உடைய உங்களுக்கு புத்தாண்டு ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . இதுவரை வாழ்க்கையில் போராடத்துடனே வாழ்ந்து வந்த உங்களுக்கு நற்பலன்கள் தானாகவே வந்து சேரும் . எடுத்த காரியங்கள் ஓரளவு சிரமமில்லாமல் வெற்றிகரமாக முடியும் . புதிய விஷயங்களை கற்பதிலும் ஈடுபடுவதிலும் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் .

பேச்சில் சாமர்த்தியம் கூடும் . அதே சமயம் தேவையில்லாமல் மற்றவர்களிடம் பேசுதல் கூடாது . தேவை இல்லாத பிரச்சனைகளையும் பகையையும் உண்டு பண்ணும் . ஆடை , ஆபரணங்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஆரம்ப கல்வி பயில்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டும் .

சகோதர சகோதரிகளால் ஓரளவு நற்பலன்கள் கிட்டும் . அவர்களால் நன்மையையும் ஒரு சிலருக்கு உடன் பிறப்புகளின் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு அமையும் . புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பதில் திறமையும் அமையும் . பகுதிநேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ படிக்க வாய்ப்பு அமையும் . அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும் . நேர்முகத்தேர்வில் அடிக்கடி கலந்து கொள்ளும் வாய்ப்பும் அதில் வெற்றி பெரும் அமைப்பும் ஒரு சிலருக்கு கிட்டும். எழுதுவதிலும் கலைத்துறையிலும் ஆர்வமும் திறமையும் கூடும் .

உயர்கல்வி பயில வாய்ப்பு நன்கு அமையும் . எதிர்பார்த்த மதிப்பெண் மற்றும் கல்லூரி , பல்கலை கழகங்களில் சேர வாய்ப்பு அமையும் . வீடு , மனை , இடம் , வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு கிட்டும் . கடன் வாங்கி வீடு வண்டி வாகனம் வாங்க சந்தர்ப்பம் அமையும் . அதே சமயம் போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனமுடன் சென்று வரவும் . சொத்து வாங்குவதில் பத்திரம் சரியாக இருக்கிறதா என கவனித்து சொத்து வாங்கவும் . மேலும் உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . பழைய வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் அமையும் .

குழந்தைகளால் ஒரு சிலருக்கு ஆதாயமும் அவர்களால் மன உளைச்சலும் ஏற்படும் . குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும் . அதே சமயம் ஒரு சிலருக்கு காதல் கசப்பான அனுபவமாக இருக்கும் . பங்குசந்தையில் முதலீடு ஏற்ற இறக்கமாகவே இருக்கும் . எதிர்பார்த்த லாபம் குறைந்தே காணப்படும் . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணம் புகழ் செல்வம் அமையும் . அரசியலில் இருப்பவர்கள் மிக கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . இல்லையேல் எதிர்பார்த்த வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி வரும் . சமூக சேவைகள் புரிபவர்கள் புகழ் பெறுவர் . புதிதாக மந்திர உபதேசமும் ஒரு சிலர் பெறுவர் .

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தயோக உயர்வும் அதே சமயம் ஊதிய உயர்வும் கிட்டும் . அதே சமயம் தனியார் துறையில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த நல்ல ஊதியம் அமையும். இதுவரை வேலை தேடி அலைந்தவர்களுக்கு கடுமையான போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலர் எதிர்பார்த்த நல்ல கம்பெனிக்கு வேலையை மாற்ற வேண்டிய சூழ்நிலை அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு வெளிமாநிலங்கள் செல்ல சந்தர்ப்பம் அமையும் . கடன் வாங்க சந்தர்ப்பம் அமையும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . அதிக அளவு வட்டியும் கட்ட நேரிடும் . வழக்குகளில் வெற்றி கிட்டினாலும் இழுத்துக் கொண்டே போகும் . உடலில் அடிவயிறு , முழங்கால் , பாதம் , கல்லீரல் , கணையம் இவற்றில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரிடம் காண்பித்தல் வேண்டும் .

இதுவரை நடக்காமல் தள்ளிப் போன திருமணம் நடக்க வாய்ப்பு அமையும் . சுயதொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொடங்க வாய்ப்பு அமையும் . உடன் பணிபுரிபவர்களால் எதிர்பார்த்த நன்மையும் அதே சமயம் அவர்களால் எதிர்பாராத பிரச்சனைகளும் ஏற்படும் . ஒரு சிலருக்கு அசிங்கம் அவமானம் ஏற்பட சந்தர்ப்பம் அமையும் . இதுவரை தள்ளிப்போன விசா கிடைக்க பெற்று வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . அடிக்கடி கோவில் மற்றும் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும் .

மருத்துவம் , பொறியியல் , நீதி , சட்டத்துறையில் பணி புரிபவர்கள் , போக்குவரத்து , செய்தி ,தகவல் தொடர்பு மற்றும் ஆசிரியர் துறையில் பணிபுரிபவர்கள் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் உற்பத்தி துறையில் இருப்பவர்கள் , அதை விற்பவர்கள் ஏற்றம் பெறுவர் .

சிறுதொழில் , சுயதொழில் புரிபவர்கள் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டாலும் இறுதியில் லாபம் ஈட்டுவர் . ஜவுளி , ஆடை , ஆபரண தொழில் , ரியல் எஸ்டேட் துறை , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் ஓரளவு நல்ல லாபம் அடைவர் . ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , அரசியல்வாதிகள் சுமாரான பலனை அனுபவிப்பர் . கலைத்துறை , விஞ்ஞானம் , ஆராய்ச்சி இவற்றில் இருப்பவர்கள் நன்மை அடைவர் . மதகுருமார்கள் , மதபோதகர்கள் , ஜோதிடர்கள் , ஆச்சாரியர்கள் , அந்தணர்கள் பெயர் , புகழ் பெறுவர் .

எம்பெருமான் திருச்செந்தூர் முருகனையும் ஸ்ரீ மகாலெஷ்மியையும் வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் கூடும் . எண்ணிய எல்லாம் நல்லனவாக நடந்தேறும்
மேலும் இங்கே தொடர்க...

சிம்மம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை








தலைமை தாங்கும் ஆற்றலும் எப்பொழுதும் முன்னிலை வகிக்கும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . உங்களது புகழ் கூடும் . எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும் எப்பொழுதும் வெற்றியுடனும் செயல்படுவீர்கள் . பேச்சில் சாமர்த்தியம் கூடும் . ஆரம்ப கல்வி பயில்பவர்கள் எளிதில் வெற்றி அடைவர் . தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை நல்ல வழியில் செலவு செய்வீர்கள் . சுபச்செலவுகள் கூடும் . மற்றவர்களிடம் பேசும் பொழுதும் உடன் பணிபுரிவோர்களிடம் பேசும் பொழுதும் மேல் அதிகாரிகளிடமும் கவனமாக நடந்து கொள்ளல் வேண்டும் . இல்லையேல் நாம் பேசும் பேச்சே விபரீதமாக அமையும் .

அடிக்கடி பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் அமையும் . புதிய செயல்களில் ஈடுபட வெற்றி கிட்டும் . எதிர்பார்த்த செய்திகள் சற்று தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிட்டும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும் . மேலும் உறவினர்களாலும் நன்மை ஏற்படும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . அடிக்கடி நேர்முகத்தேர்வு , போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் . தாயாரை விட்டு பிரிய நேரிடும் . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை .

ஒரு சிலருக்கு பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க சந்தர்ப்பம் அமையும் . வீடு , மனை , வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . அடிக்கடி நல்ல ஆடைகள் வாங்கவும் ஆபரணங்கள் வாங்கவும் சந்தர்ப்பம் அமையும் . நல்ல கல்வி ஏற்படும் . தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த கல்லூரிகள் அமையவும் வாய்ப்பு ஏற்படும் . அதே சமயம் நன்கு உழைத்தால் மட்டுமே வெற்றி கிட்டும் . இல்லையேல் மயிரிழையில் தோல்வியை தழுவ நேரிடும் . படிப்பில் மிக அதிக கவனம் தேவை . வேலையில் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் . எனவே வேலையில் கவனமுடன் செயல்படுதல் வேண்டும் .

காதல் விஷயங்கள் ஒரு சிலருக்கு வெற்றியும் , அது திருமணத்திலும் போய் முடியும் . ஒரு சிலருக்கு காதலால் அசிங்கம் அவமானப்படவும் நேரிடும் . எனவே எச்சரிக்கை தேவை . குழந்தை இல்லாதவர்கள் தெய்வ அனுகூலத்தை கூட்டவும் . அப்பொழுதுதான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் . பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை. தேவையில்லாமல் பெரிய அளவில் முதலீடு கூடாது . எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பின்னால் நல்ல புகழும் வருமானமும் அந்தஸ்தும் அதிகரிக்கும் . அரசியலில் இருப்பவர்கள் கடுமையான போட்டியை சந்திக்க வேண்டி வரும் . எதிர்பார்த்த வெற்றியை பெற வலுவாக போராட வேண்டி வரும் . சமூக சேவைகள் செய்பவர்கள் சமூகத்தில் பெயர் புகழுடன் விளங்குவர் .

இதுவரை வேலை தேடுவதையே வேலையாக கொள்பவர்களுக்கு நல்ல வேலை அமையும் . நல்ல உத்தியோகமும் அதற்கேற்ற நல்ல சம்பளமும் கிடைக்கும் . புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை எளிதில் கிடைக்கும் என்றாலும் பார்க்கும் வேலையை விடுவதில் மிக அதிக கவனமாக இருத்தல் வேண்டும் . உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும் . கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதில் சற்று தாமதம் ஆனாலும் சிறிது சிறிதாக அந்த பணம் வந்து சேரும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . போட்டி மற்றும் பந்தைய தேர்வுகளில் வெற்றி பெற சந்திர்ப்பம் அமையும் .உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை .கண் ,வயிறு , முழங்கால் , கழுத்து, போன்ற உடலின் அவயங்களில் பிரச்சனை ஏற்பட்டு விலகும் .

திருமணம் தள்ளிபோனவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தராது . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ளவும் . எதிர்பாராத தனவரவு ஒரு சிலருக்கு அமையும் . மனைவி மூலம் பொருள்வரவு அல்லது முன்னோர்களின் தனவரவு கிடைக்கும் . அடிக்கடி தெய்வ தேவாலய தரிசனங்கள் கிடைக்கும் . ஒரு சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு தாய் மாமன்களால் எதிர்பார்த்த அன்பும் ஆதரவும் கிட்டும் . நண்பர்களால் பொருள் உதவி கிட்டும் .

விவசாயம் எதிர்பார்த்த லாபத்தை தரும். மேலும் மருத்துவம் , பொறியியல் , சிமிண்ட் , மருந்து இரசாயனம் , நகை , ஜவுளி , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் , அழகு சாதன பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் லாபம் அடைவர் .

அரசுத்துறை , நிதித்துறை , நீதித்துறையில் இருப்பவர்கள் அணு ஆராய்ச்சி , ஆடிட்டர் தொழில் புரிபவர்கள் மற்றும் போலீஸ் , இராணுவம் இவற்றில் பணி புரிபவர்கள் தங்களது தொழில்களில் மேலான கவனத்தை செலுத்துதல் வேண்டும் .

ஓட்டல் , போக்குவரத்து , தகவல்துறை , கம்ப்யூட்டர் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் எலக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த லாபம் அடைவர் . ஏற்றுமதி , இறக்குமதி தொழில் செய்பவர்கள் ரியல் எஸ்டேட் , லாட்ஜ் மற்றும் மருத்துவமனை நடத்துபவர்கள் லாபம் பெறுவர் .

எம்பெருமான் சிவனை வணங்கிவருவதன் மூலமும் ஹோமம் மற்றும் பாராயணங்கள் செய்வதின் மூலமும் நற்பலன் அதிகரிக்கும்
மேலும் இங்கே தொடர்க...

கன்னி 01.01.2010 முதல் 31.12.2011 வரை










எப்பொழுதும் உழைப்பையும் வெற்றியையும் மட்டுமே நோக்கமாக கொண்டு வாழும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . இதுவரை வாழ்க்கையில் முன்னேற இருந்த தடை அனைத்தும் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . பெயர் , புகழ் , பணம் இவைகள் எதிர்பார்த்த அளவில் கிடைக்க சந்தர்ப்பம் அமையும் .

பேச்சில் சாமர்த்தியம் கூடும் . பேச்சின் மூலம் ஆதாயம் அடைய சந்தர்ப்பம் அமையும் . ஆரம்பகல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . ஆடை , ஆபரண , சேர்க்கை கூடும் . ஒரு சிலருக்கு கை ரொக்கயிருப்பு அதிகரிக்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு உடன்பிறப்புகளால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடன் பிறப்புகளுக்கு இதுகாறும் தள்ளிப்போன சுபகாரியங்கள் உடனடியாக நடந்தேறும் . நெருங்கிய உறவினர்களை இழக்க நேரிடும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும் . எப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக முயற்சி செய்து கொண்டிருக்க வாய்ப்பு அமையும் . அடிக்கடி பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் அமையும் போக்குவரத்தில் மிக கவனம் தேவை . மிகவும் அதிக அளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .

இடம் , பொருள் , வீடு வாங்குவதில் தடை ஏற்பட்டு பின் வாங்க சந்தர்ப்பம் அமையும் . எதிர்பார்த்த மதிப்பெண்ணும் கல்லூரியும் அமையப் பெரும். மேலும் உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . அடிக்கடி உடல் ஆரோக்கியம் கெடும் . அதிக கவனம் தேவை . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை . தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் .

குழந்தைப் பேரு இல்லாதவர்களுக்கு மக்கட் செல்வம் அமைய சந்தர்ப்பம் அமையும் . நீண்ட நாட்களாக வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல விதமாக நடந்தேறும் . காதல் விஷயங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியும் பின் பிரச்சனைகளும் இறுதியில் சுமூகமாக முடியும் . பங்குச்சந்தையில் ஆரம்பத்தில் நல்ல லாபம் ஏற்படும் . அத்துடன் பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருப்பதை கொண்டு முதலீடு செய்யவும் . கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல பெயர் , புகழ் , வருமானம் ஏற்படினும் வருட மத்தியில் பிரச்சனைகளும் போராட்டங்களும் சந்திக்க நேரிடும் . அரசியல் வாழ்க்கையும் ஆரம்பத்தில் நற்பலனும் மத்தியில் கடுமையான போட்டியும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடும் . ஒரு சிலர் விருந்து கேளிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டு பெயர் புகழை கெடுத்து கொள்ள வாய்ப்பு அமையும் . உல்லாசமாக வெளியூர் செல்ல சந்தர்ப்பம் கிட்டும் .

வருட ஆரம்பத்தில் வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும் . புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களும் வேறு கம்பெனிக்கு மாற ஆசைப் படுபவர்களின் விருப்பமும் பூர்த்தியாகும் . உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் , உத்தியோக உயர்வும் கிட்டும் . ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு நல்ல கம்பெனிக்கு செல்ல யோகம் அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளியூர் , வெளிமாநிலம் , வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும் . கொடுத்த பணம் திரும்ப பகுதி பகுதியாக வந்து சேரும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . போட்டித் தேர்வு , எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வில் வருட ஆரம்பத்திலேயே வெற்றி கிட்டும் . இதயம் , அடிவயிறு , முழங்கால் ஆகிய உடல் பகுதிகளில் உடல் உபாதைகள் ஏற்பட்டு விலகும் .

இதுவரை தள்ளிப்போன திருமணம் இனிதே நடந்தேறும் . அழகான கணவன் அல்லது மனைவி அமைய சந்தர்ப்பம் அமையும் . வழக்குகள் இழுத்துக் கொண்டே போகும் . உடன் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடம் மிகவும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட கூடாது . கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு பார்ட்னரால் பிரச்சனை ஏற்படும் . அதனால் தொழிலில் பின்னடைவு நிகழும் . ஒரு சிலருக்கு சுயதொழிலில் பெரிய போட்டி ஏற்பட்டு பிரச்சனை ஏற்படும் . ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல் பட வேண்டும் .

உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும் . நீண்ட தூர ஸ்தல யாத்திரை செய்ய சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு தொழிலை மாற்றி செய்ய வாய்ப்பு கிட்டும் . ஒரு சிலருக்கு அரசு வேலையை விட்டு விட சூழ்நிலை ஏற்படும் . பெரிய அளவில் முதலீடு செய்யாமல் ஓரளவு முதலீடு செய்து லாபம் பார்க்கவும் .

ஆடை , ஆபரண , ஜவுளி மற்றும் ரியல் எஸ்டேட் , போக்குவரத்து , தகவல் தொடர்பு , சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் . சிறுதொழில் புரிபவர்கள் ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் , கன்சல்டன்சி , ஓட்டல் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் .

மருத்துவம் , பொறியியல் , ஆசிரியர்கள் , சட்டம் மற்றும் நீதித்துறையில் இருப்பவர்கள் பள்ளி கல்லூரி பல்கலைகழகங்களில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெற்றாலும் மிகவும் கவனமுடன் செயல்படுதல் வேண்டும் . தோல் ரப்பர் , பிளாஸ்டிக் , இரும்பு , பட்டாசு துறைகள் எதிர்பார்த்த நல்ல லாபம் ஏற்படும் . விவசாயத்தில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவர் . காய்கறி , பழம் , பூ , வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர் .

" திருக்கடையூர் " சென்று அன்னை அபிராமியை வணங்கி வர நற்பலன் ஏற்படும் . மேலும் மதுரை ஸ்ரீ சொக்கநாதரை வணங்கி வர நற்பலன் ஏற்படும் .
மேலும் இங்கே தொடர்க...

துலாம் 01.01.2011 முதல் 31.12.2011









எப்பொழுதும் உண்மையும் நேர்மையும் வெற்றியை மட்டும் விரும்பும் உங்களுக்கு இந்த புத்தாண்டு ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . தங்களது புகழ் , கௌரவம் , அந்தஸ்து , பேசப்படும் வகையில் அமையும் . இதுவரை காலம் தாழ்த்தி வந்த பலன்கள் உடனடியாக நற்பலனாக நடக்க ஆரம்பிக்கும் . எதிர்நீச்சல் போட்டு ஜெய்க்க வேண்டிய காரியம் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும் .

கஷ்டப்பட்டு உழைக்கும் உங்களுக்கு கையில் வந்து சேர்ந்து சுப விரையமாக செலவாகும் . மேலும் இடம் மனை வீடு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் படிப்பில் மிக அதிக கவனம் தேவை . இல்லையேல் கல்வியில் தடை ஏற்பட்டுப் பின் தொடர வாய்ப்பு அமையும் . பேச்சில் கவனமாக இருத்தல் வேண்டும் . தேவையில்லாமல் பேசுவது தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணி விடும் . எனவே பேச்சை குறைக்கவும் . ஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும் .முன்னோர்கள் சொத்து அல்லது மனைவி மூலம் பொருள்வரவு ஒரு சிலருக்கு கிடைக்கும் .

அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஏற்படும் . பழைய வீட்டை விற்று விட சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும் . அவர்களுக்கு இதுகாறும் நடைபெறாமல் இருந்த சுபகாரியம் நடந்தேறும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்பட சந்தர்ப்பம் அமையும் . புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கிடைக்கும் . உறவினர்களால் நன்மையும் நெருங்கிய உறவினர்களை இழக்க சந்தர்ப்பம் அமையும் . பகுதி நேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புதிய விஷயங்களை கற்க அல்லது படிக்க சந்தர்ப்பம் கூடி வரும் . தாயாரை விட்டு பிரிய நேரிடும் . தாயாரின் உடல் நலத்தில் மிக கவனம் தேவை . சிறுதொழில் வீட்டில் வைத்து தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர் . வங்கியில் வரவு செலவு செய்ய சந்தர்ப்பம் கூடி வரும் .

கல்வியில் நல்ல கவனம் தேவை . இல்லையேல் கல்வியில் தடை ஏற்படும் . எதிர்பார்க்கும் கல்லூரி கிடைப்பதிலும் தடை ஏற்படும் . பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் கிட்டும் . உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . ஆடை ஆபரணம் சேர்க்கைகள் ஏற்படும் . வீடு வீட்டு உபயோகப் பொருட்கள் வண்டி வாகனங்கள் வாங்க சந்தர்ப்பம் கைகூடிவரும் . விவசாயத்தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படினும் இறுதியில் நஷ்டமே மிகும் . எனவே விவசாயத்தில் மிககவனத்துடன் செயல்படுதல் வேண்டும் .

இதுகாறும் வீட்டில் தள்ளிப்போன சுபகாரியம் நல்ல படியாக நடந்தேறும் . சுபகாரியம் நடக்க சந்தர்ப்பம் கைகூடி வரும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பரிகாரம் செய்ய குழந்தை பேரு கிடைக்கும் . கோவில் மற்றும் ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபட்டு அதில் சுப விரையம் ஏற்படும் . காதல் விஷயங்களில் ஒரு சிலருக்கு வெற்றியும் மற்றும் ஒரு சிலருக்கு அசிங்கமும் அவமானமும் ஏற்படும் . பங்குச்சந்தையில் ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் ஓரளவு நல்ல லாபத்துடன் வாழ வழி வகை அமையும் . உல்லாசமாக சுற்றுலா செல்வதில் அநேகருக்கு சந்தர்ப்பம் கிட்டும் . அதே சமயமும் அதில் பிரச்சனைகளும் ஏற்படும் . அரசியலில் நிறைய இழக்க வேண்டி வரும் . வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும் . சமூகத்தில் பொது வாழ்க்கையில் தொண்டு நிறுவனங்களில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும் .

இதுவரை வேலை இல்லாமல் நிம்மதி இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . வேலையில் ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் அமையும் . ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வாய்ப்பு அமையும் . பார்க்கும் வேலையில் முன்னேற்றமும் வெளிநாடுகளில் வேலை செய்ய சந்தர்ப்பமும் ஒரு சிலருக்கு கூடி வரும் . வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல காலம் கனிந்தேறும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வு , நேர்முகத்தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும் . உடலில் அடிவயிறு , கால் , பாதம் , இடது கண் , போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் . எனவே உடல் நலத்தில் மிக கவனம் தேவை .

திருமணம் தள்ளி போனவர்களுக்கு திருமணம் நடந்தேறும் . சுயதொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . விசா கிடைக்காமல் இருப்பவர்களுக்கு சற்று போராட்டத்திற்கு பின் விசா கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . நண்பர்களால் ஆதாயமும் பொருள் உதவியும் கிட்டும் . உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள சந்தர்ப்பம் அமையும் . ஆலய மற்றும் தெய்வ தரிசனம் அடிக்கடி அமையும் .

ஆடை , ஆபரணம் , நகை , ஜவுளி தொழில் எதிர்பாராத லாபத்தை தரும் . நீதி துறை , சட்டத் துறை , ஆசிரியர் துறை மற்றும் ஆராய்ச்சி அணு விஞ்ஞான துறையில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் . போக்குவரத்து , செய்தி , தகவல்தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் , ஓட்டல் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோக்கர் , ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மேன்மை அடைவர் . சிறுதொழில் வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரம் புரிபவர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஏற்றம் பெறுவர் . மருத்துவம் , பொறியியல் ,ராணுவம் , விமான சேவை புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர் .

அன்னை அகிலாண்டேஸ்வரியை வணங்கி வருதல் மூலமும் ஆஞ்சிநேயரை வணங்கி வருதல் மூலம் எதிர்பார்த்த நற்பலன் நடக்க வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் .
மேலும் இங்கே தொடர்க...

விருச்சிகம் 01.01.2011 முதல் 31.12.2011வரை










எப்பொழுதும் சுறுசுறுப்பும் தலைமை தாங்கும் யோகமும் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் உங்களுக்கு இவ்வாண்டு ஓரளவு நற்பலன்கள் நடந்தேறும் .எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் . பெயர் , புகழ் ,செல்வம் , செல்வாக்கு அதிகரிக்கும் . உங்களது தனித்தன்மை கூடும் . எப்பொழுதும் வெற்றியை மட்டுமே நினைத்து காரியம் ஆற்றுவீர்கள் .

பேச்சில் சாமர்த்தியம் கூடும் .உழைத்து சம்பாத்தியம் பொருள் நல்லபடியாக கைக்கு வந்து சேரும் , ஆடை ,ஆபரணம் ,விட்டு உபயோக பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஆரம்ப கல்வியில் நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு அதிகரிக்கும் . எதிர்பாராத தனவரவு ,பொருள்வரவு அமையும்.

புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறைமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் . எழுதுவதில் , கலை துறையில் ஆர்வமும் , திறைமையும் அதிகரிக்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மைகள் அதிகரிக்கும். அவர்கள் பிரியமுடன் நடந்து கொள்வர் . அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.தபால் மூலமாகவோ , பகுதி நேரமாகவோ , ஆன்லைன் மூலமாகவோ புதிய விஷயங்களை கற்பதில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி கல்வி தொடர வாய்ப்பு அமையும். உறவினர்களால் நன்மை ஏற்படும் . வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய தொழில் தொடங்க முயற்சி எடுத்து அதில் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள் இருப்பினும் எப்பொழுதும் ஒரு மனச்சலத்துடனே காணப்படுவதை தவிர்க்க வேண்டும் . இல்லையேல் நாம் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியாமல் போகும்.

உயர் கல்வி பயில நல்ல சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமையும் நல்ல மதிப்பெண்ணுடன் எதிர்பார்த்த கல்லூரியும் எதிர்பார்த்த துறையும் அமையும் . ஒரு சிலர்க்கு விடு , வண்டி , வாகனங்கள் வாங்க சந்தர்ப்பம் கிட்டும் . தாயாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் .அசையும் மற்றும் அசையா சொத்துக்களால் ஒரு சிலருக்கு நல்ல லாபம் ஏற்படும். அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை . உடலில் தேம்பல் , காய்ச்சல் , மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்து கொள்ளல் வேண்டும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதுவரை வீட்டில் தள்ளி போன சுபகாரியம் இனிதே நிறைவேற சந்தர்ப்பம் அமையும். உல்லாசமாக பொழுது போக்க ஒரு சிலர் வெளியூர் , வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் ஆரம்பத்தில் மத்திமமாயும் பின் போராட்டமும் அதன் பின் ஆசை அபிலாசையும் புர்த்தியும் அமையும். குழந்தைகளால் எதிர்பார்த்த லாபமும் அன்பும் ஏற்படும் . குழந்தைகளின் சுப காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும் . பங்கு சந்தையில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும் . கலைத்துறையில் இருப்பவர்கள் குறிப்பாக சின்ன த்திரை , பெரிய திரையில் இருப்பவர்கள் பெயர்,புகழ் பெறுவர் .ஆனால் எதிர்பார்த்த பணம் வந்து சேராது . விளையாட்டில் அதிக ஈடுபாடு ஏற்படும். சமுக சேவை செய்பவர்கள் . நல்ல புகழ் பெறுவர் . பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்ளல் வேண்டும் . இல்லையேல் அசிங்கம் , அவமானம் , பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் .

வேலை இல்லாமல் வேலை தேடுபவர்களுக்கு கடும் போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடுதல் கூடாது .ஒரு சிலருக்கு அரசு வேலையில் தாமதமானாலும் கண்டிப்பாக கிடைக்கும் . கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் வேறு கம்பெனிக்கு மாறுவதை சற்று தள்ளி போடவும் .உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை .தலை , அடி வயிறு , கண் ,ஜனன உறுப்புகளில் பிரச்சனை ஏற்பட்டால் நல்ல மருத்துவரை உடனே பார்த்துவிடவும் . வழக்குகள் இழுத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் .புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் .

இதுவரை தள்ளி போன திருமணம் நடந்தேற சந்தர்ப்பம் அமையும் . சுய தொழில் அல்லது கூட்டாளியுடன் ஒரு சிலர் தொழில் செய்ய சந்தர்ப்பம் கூடிவரும் . மிகவும் கவனமுடன் செயல்படவும் . தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . ஒரு சிலருக்கு எதிர்பாராத தனவரவு பொருள்வரவு அமையும் .

உயர் கல்வி பயில சந்தர்ப்பம் கூடி வரும் . ஒரு சிலருக்கு உயர் கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும். இதுவரை தள்ளி போன விசா கிடைக்கும் .அடிக்கடி ஆலய தரிசனம் மற்றும் தெய்வ தரிசனம் அமையும். வேலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும்.

அரசியலில் இருப்பவர்கள் மிக கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் . விவசாயத் துறையில் இருப்பவர்கள் நல்ல வருமானம் ஈட்டுவர் ,அரசு துறை மற்றும் தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் .

எலெக்ட்ரிக்கள் , எலெக்ட்ரானிகஸ் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் , செய்தி , போக்குவரத்து , தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . ஓட்டல் , ரியல் எஸ்டேட் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோகர்ஸ் நல்ல லாபம் அடைவர் . பத்திரிகை , விளம்பரத்துறை , அழகுகலையில் இருப்பவர்கள் பெயர் புகழ் பெறுவார்கள் . ஆடை , ஆபரணம் , பூ , காய்கறிகள் , பழங்கள் விற்பனை செய்வோர் , சிறுதொழில் , குறுந்தொழில் புரிவோர் ஓரளவு லாபம் அடைவர் .

பார்வதி தேவியை அல்லது அம்பாள் சன்னதி சென்று வணங்கவும் மேலும் சரஸ்வதி தேவியை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன் கூடும் .
மேலும் இங்கே தொடர்க...

தனுசு 01.01.2011 முதல் 31.12.2011 வரை


வீட்டில் சுபகாரியம் நடக்க சந்தர்ப்பம் கூடும் . இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைச் செல்வம் அமைய சந்தர்ப்பம் கூடும் . பங்குச்சந்தையில் ஈடுபடுவோர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் . கலைத்துறையில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும் . எதிர்பார்த்த லாபம் ஏற்படும் . காதல் விஷயங்களில் ஈடுபடுவோர்களுக்கு காதல் கணிந்து வெற்றி அடையும் . ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும் .

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு புதிய கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வாய்ப்பு அமையும் . வேலையில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும் , ஊதிய உயர்வும் கிட்டும் . புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . உடலில் கண் , தோள்பட்டை , அடிவயிறு , கால் பாதங்களில் நோய் ஏற்பட்டு விலகும் . போட்டி தேர்வு நேர்முகத் தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் .

இதுவரை நடக்காமல் தள்ளிப்போன திருமணம் நடக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . சுயதொழில் புரிவோர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்பு அமையும் . கோர்ட் வழக்குகள் எதிர்பார்த்த வெற்றியை தருவதில் இழுப்பறி இருந்து கொண்டே இருக்கும் . உயர் அதிகாரிகளிடம் மிக கவனமாக பழகுதல் வேண்டும் . இல்லையேல் வேலையில் பிரச்சனை ஏற்படும் .

தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை. ஒரு சிலருக்கு முன்னோர்கள் சொத்து அல்லது மனைவியின் மூலம் தனவரவு , பொருள்வரவு அமையும் . அதே சமயம் அதிக அளவு கடன் வாங்கி வட்டி கட்டவும் ஒரு சிலருக்கு அமையும் .

உயர் கல்வி பயில நல்ல சந்தர்ப்பம் ஆன காலம் இது .இதுவரை விசா கிடைக்காமல் தாமதமாக இருந்த நிலை மாறி விசா கிடைத்து வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும். ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல யோகம் ஏற்படும். ஆலய மற்றும் தெய்வ தரிசனம் செய்ய வாய்ப்பு அமையும்.செய்யும் தொழிலில் நல்ல பெயர் , புகழ் வாங்குவதில் கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்க வேண்டிவரும் .

நண்பர்களால் ஆதாயமும் அவர்களால் நற்பலனும் ஏற்படும் .அதே சமயம் அவர்களால் ஒரு சில மன வருத்தங்களும் ஏற்பட்டு விலகும் . உறவினர்களால் நன்மை ஏற்படும்.

அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்சி மாறுவதாக இருந்தால் மிக அதிக கவனம் தேவை . வெற்றி பெறுவதற்கும் கடுமையாக போராட வேண்டிவரும் . விவசாயம் எதிர்பார்த்த அளவு ஓரளவு சாதகமாக அமையும்.

நிதி,நீதி ,சட்டத்துறை ,இன்சூரன்ஸ் ,ஆசிரியர் தொழிலில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர் .மருத்துவம் ,பொறியியல் , இராணுவம் , மற்றும் காவல்த்துறையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருத்தல் அவசியம் .

செய்தி ,தகவல் தொடர்பு ,போக்குவரத்து ,ஓட்டல் ,எலெக்ட்ரிக்கள், எலெக்ட்ரானிகஸ் ,கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் ,அரசு துறையில் பணிபுரிபவர்கள் மேன்மை அடைவார்கள்.சிறு தொழில் புரிபவர்கள் சுய தொழில் புரிபவர்கள் ஏற்றுமதி,இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் அடைவர் .கமிஷன் , ஏஜென்சி ,ப்ரோக்கர் ,பங்கு சந்தையில் இருப்பவர்கள் லாபமும் ,நஷ்டமும் கலந்து அனுபவிப்பர் .

நாகப்பட்டினம் " நீலாயுதாஷி " அம்மன் வணங்கி வருவதன் மூலமும் ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்குவதன் மூலமும் நற்பலன் அதிகரிக்கும் எண்ணிய எல்லாம் நல்லதே நடக்க வாய்ப்பு அமையும் .
மேலும் இங்கே தொடர்க...

மகரம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை









விடா முயற்சியும் அதில் வெற்றியையும் காணும் உங்களுக்கு புத்தாண்டு நற்பலன்களையே அதிக அளவில் வழங்க உள்ளது .இதுவரை இருந்த போராட்டங்கள் எல்லாம் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . தனித்தன்மை கூடும் . புதிய உற்சாகமும் சுறு சுறுப்பும் அதிகரிக்கும் நினைத்தை முடிக்கும் ஆற்றலும் அதற்கேற்ற சுழலும் அமையும் .

கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் நல்ல நிலையில் அதை முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் .பேசுவதில் ஆர்வமும் திறமையும் கூடும் .ஆடை ,ஆபரண சேர்க்கை ஏற்படும் . ஆரம்பகல்வி பயில்பவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்று மகிழ்ச்சியடைய சந்தர்ப்பம் அமையும் . நேரம் தவறாமல் உண்ண சந்தர்ப்பம் கிட்டும்.

புதிய புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் ஏதாவது ஒன்றை கற்று கொண்டே இருக்க காலம் கனிந்திடும் .தபால் மூலமாகவோ , பகுதி நேரமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஏதாவது கற்றும் எதையாவது தேடியும் நேரம் போய்க் கொண்டிருக்கிறோம் .கதை , கட்டுரை , கவிதை , புத்தகம் , புத்தகம் எழுவதில் ஓவியம் வரைவதிலும் கலை துறையிலும் ஆர்வமும் மகிழ்ச்சியும் கூடும் . உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும். உறவினர்களால் நன்மையும் அன்பும். அதிகரிக்கும் அடிக்கடி இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு மன மாற்றமும் ஊர் மாற்றமும் அமையும். அடிக்கடி பயணம் அமையும்.ஒரு சிலர் வெளிநாடு , வெளிமாநிலம் செல்ல சந்தர்ப்பம் அமையும் .

வீடு ,இடம் , மனை வாங்குவதற்கு வாய்ப்பு அமையும். அதிகளவில் சொத்துக்களில் முதலீடு செய்ய சந்தர்ப்பம் அமையும் . தாயாரின் அன்பும் ஆதரவும் நன்கு திருப்திகரமாக இருக்கும். வீடு , வீட்டு உபயோகப் பொருட்கள் வண்டி வாகனங்கள் வாங்க காலம் கனிந்துவரும் . விவசாயத்தில் நல்ல லாபம் ஏற்படும் . புதுப்புது வகைகளைப் பயிர் செய்ய காலம் அமையும் . நல்ல கல்வியும் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் அதற்க்கேற்ற கல்லூரியும் அமைய வாய்ப்பு கிடைக்கும் .ஒரு சிலர் தாய்,தந்தையரை விட்டு சிறிது காலம் பிரிந்திருக்க வாய்ப்பு அமையும்.

பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும் . இதுவரை குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல பெயரும் , புகழும் , பணமும் அமையும் . ஒரு சிலர் உல்லாச பொழுது போக்க வெளியூர் சுற்றுலா செல்ல சந்தர்ப்பம் அமையும் . அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும் .இல்லையேல் வெற்றி என்பது கனவாகிவிடும் . இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் விட்டில் நடக்க வாய்ப்பு அமையும் . சமுக சேவை செய்பவர்கள் பொது நல வாதிகள் நல்ல பெயரும் , புகழும் அடைவர் .

உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக அளவில் கவனம் தேவை . தோள்பட்டை , முதுகு , கால் , அடி வயிறு இவற்றில் நோய் இல்லாதவாறு கவனித்து கொள்ளல் வேண்டும் . குறிப்பாக நரம்புத்தளர்ச்சி , ரத்த கொதிப்பு வயிற்றில் புண் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளல் வேண்டும் . இதுவரை வேலையில்லாமல் அலைந்து திரிந்தவர்களுக்கு வேலை கிடைக்க சந்தர்ப்பம் கை கூடும் . வேலையில் இருப்பவர்களுக்கு வேறு நல்ல கம்பெனிக்கு செல்ல நேரம் வாய்க்கும் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் . போட்டி தேர்வு மற்றும் பந்தய தேர்வு , நேர்முக தேர்வுகளில் எதிர்பார்த்த நற்பலன் அமையும் . வழக்குகளை தவிர்த்தல் வேண்டும் . இல்லையேல் வழக்குகள் இழப்பறியே அமையும்.

தாமதமாகி வந்த திருமணம் சீக்கிரம் நடக்க சந்தர்ப்பம் அமையும் .ஏற்றுமதி,இறக்குமதி தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர் . உயர் அதிகாரிகளிடமும் , சக ஊழியர்களிடமும் கவனமாக பேசுதல் வேண்டும் . இல்லையேல் பகையும்,மனக்கசப்பும் வந்து சேரும்.தந்தையாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .

அடிக்கடி வெளியூர் செல்ல சந்தர்ப்பம் கை கூடி வரும் . நீண்ட தூர ஸ்தலயாத்திரை செய்ய வாய்ப்பு கிட்டும் . உயர் கல்வி பயிலவும் உயர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கவும் வாய்ப்பு அமையும் . ஒரு சிலருக்கு உயர் கல்வி பயிலுபவர்தற்க்காக வெளிநாடு செலும் யோகமும் கை கூடி வரும் . செய்யும் தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். நண்பர்களால் நல்ல நட்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படும். பெரிய அளவில் சொத்துக்களில் முதலிடு செய்ய சந்தர்ப்பம் அமையும். பழைய கார் போன்ற வாகனங்களை வாங்குவதை தவிர்த்து புதிய கார் வாங்க சந்தர்ப்பம் கை கூடி வரும் .

கலை துறையில் இருப்பவர்கள் , பத்திரிக்கை , செய்தி , தகவல் தொடர்பு , போக்குவரத்து , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் , சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் , மத சம்பந்தமான ஆசாரியர்கள் ,ஆசிரியர்கள் ,மத குருமார்கள் , போதகர்கள் , குருக்கள் , அந்தனர்கள் , வேதவிற்பன்னர் , ஜோதிடர்கள் ஏற்றம் பெறுவர் .

ஆடை, ஆபரணம் , ஜவுளி , அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விற்பவர்கள் ஓட்டல் , லாட்ஜ் , கமிஷன் ,ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் தொழில் புரிபவர்கள் . நடை வியாபாரிகள் , தெரு வோரம் வியாபாரம் செய்பவர்கள் நற்பலன் அடைவர் . மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இருப்பவர்கள் இராசயனம் மற்றும் வெடி மருந்து , வெடி பொருள் உற்பத்தி செய்பவர்கள் , அணு ஆராயிச்சி நிபுணர்கள் சற்று கவனமுடன் இருப்பது நலம் . பால் , பூ , பழம் , காய்கறிகள் , பால் பண்ணை பொருட்கள் , தோட்ட தொழிலாளர்கள் , மீன் தொழில் புரிபவர்கள் நல்ல வளமான ஏற்றம் பெறுவர் .

ஸ்ரீ மகா லெட்சுமியை வணங்கி வரவும்.மேலும் மதுரை ஸ்ரீ சொக்கநாதரை வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன்கள் மேலும் அதிகரிக்கும்.
மேலும் இங்கே தொடர்க...

கும்பம் 01.01.2011 முதல் 31.12.2011 வரை








எப்பொழுதும் வெற்றியையும் அதை அமையும் வழி வகைகளைப் பற்றியுமே எப்பொழுதும் சிந்திக்கும் உங்களுக்கு புத்தாண்டு ஓரளவு நற்பலன்களையே அளிக்க வல்லதாகும் . எதிர்பார்த்த காரியங்களை சற்று தடை ஏற்பட்டாலும் இறுதியில் நல்ல படியாக நடந்தேறும் . பெயர் , புகழ் , கீர்த்தி கூடும்.அரசு அரசாங்கத்தால் ஓரளவு எதிர்பார்த்த நற்பலன் அதிகரிக்கும் .

ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண் மற்றும் நல்ல பள்ளி கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் . பேச்சில் சாமர்தியம் கூடும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் . நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அதிகரிக்கும் . மேலும் கஷ்டப்பட்டு உழைக்கச் சம்பாதிக்கும் பணம் நல்ல வழியில் முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் .

எடுத்த காரியங்களில் எதிர்பார்க்கும் நற்பலன்கள் மிகுந்து காணப்படும் . புதிய விஷயங்களை கற்பதிலும் புதிய புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அதிகரிக்கும் . போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த லாபம் கிட்டும் . உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் நன்மை ஏற்படும் . உறவினர்களால் எதிர்பார்க்கும் பலன் அமையும் . அடிக்கடி பிராயணம் செய்ய சந்தர்ப்பம் கிட்டும் . பழைய இடத்தைக் கொடுத்துவிட்டுப் . புதிய இடம் , மனை வாங்க வாய்ப்பு அமையும் . எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சாதகமாக வந்து சேரும் . அதே சமயம் உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை .

இடம் , வீடு , மனை வாங்க சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு மதிப்பு மிக்க இடங்களில் சொத்து வாங்க வாய்ப்பு கூடும் . மேலும் வேலையில் கவனமுடன் இருத்தல் வேண்டும் . இல்லையேல் அடிக்கடி வேலையில் மாற்றம் ஏற்படும் . மேலும் தாயாரால் ஒரு யோகம் கிட்டும் . அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை . உயர் கல்வி பயில்வதில் நன்மை ஏற்படும் . எதிர்பார்க்கும் மதிப்பெண் மற்றும் கல்லூரி கிடைக்க நிறையப் போராட வேண்டி வரும் .

ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியத்தில் தடை ஏற்பட்டுப் பின் குழந்தை பிறக்கும் . குழந்தைகளால் ஒரு சிலருக்கு மன வருத்தங்களும் போராட்டங்களும் ஏற்பட்டாலும் ஒரு சிலருக்கு குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.இதுவரை காலதாமதமான சுப காரியங்கள் குடும்பத்தில் நிகழ சந்தர்ப்பம் கை கூடி வரும் . பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும் . சமுக சேவைகள் செய்ய விருப்பம் உடையவர்கள் இதில் ஈடுபடுவதற்கு முன் நிறைய யோசனைகள் செய்வது நல்லது . பங்கு சந்தையில் ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும் . கலைத்துறையில் இருப்பவர்கள் ஏற்றமும் , புகழும் பெறுவர்.

கடன் வாங்கி சொத்து வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . இதுவரை தள்ளிப்போன வேலை கிடைக்க சந்தர்ப்பம் கூடிவரும். வேலையில் இருப்பவர்கள் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வு , நேர்முகத்தேர்வு , எழுத்துத்தேர்வில் வெற்றிபெற சந்தர்ப்பம் அமையும் . அதே சமயம் பார்க்கும் வேலையில் மிக அதிக கவனம் தேவை . புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும் . கொடுத்த பணம் தேவனை முறையில் வந்து சேரும் . உடலில் மார்பு , அடி வயிறு , ஜீரண உறுப்பு , பாதங்களில் நோய் ஏற்பட்டு விலக வாய்ப்புண்டு . எனவே உடலில் சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை சென்று பார்த்தால் நலம் .

வழக்குகள் எதிர்பார்த்த அளவு வெற்றி தரும் . அதே சமயம் அந்த வெற்றியில் சோதனைகளும் ஏற்படும் . நீண்டகாலமாக தள்ளிப்போன திருமணம் நல்லவிதமாக நடந்தேறும் . ஒரு சிலருக்கு காதல் திருமணங்களும் நடக்க சந்தர்ப்பம் அமையும். உடன் பணிபுரிபவர்களிடம் மிகவும் கவனமுடன் பேசிப் பழகுதல் வேண்டும் . தேவையில்லாத விஷயங்களை பேசுதல் கூடாது .

ஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவும் தனவரவும் அமையும் . முன்னோர்கள் சொத்துக்கள் அல்லது கணவன் அல்லது மனைவி மூலம் சொத்துக்கள் அமைய வாய்ப்புண்டு . அரசாங்க விஷயங்களில் கவனமுடன் நடக்கவில்லை எனில் அரசால் தண்டிக்கப்பட நேரிடும் . எனவே அரசு விஷயத்தில் கவனம் தேவை .

ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்ப்படிப்பு மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக ஆர்வமும் விருப்பமும் ஏற்படும் . அது சம்பதமான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும் . தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும் . வெளிநாடு செல்ல இருந்த தடைகள் நீங்கி வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . அடிக்கடி கோவில்களுக்குச் செல்ல விருப்பம் மேலோங்கும் . நண்பர்களின் அன்பும் ஆதரவும் எதிர்பார்த்த அளவிற்கு மேல் கிடைக்கும் .

ஆடை, ஆபரணம் , ஜவுளி , உணவுப் பொருட்கள் , ஓட்டல் , பழம் , பூ , காய்கறி இவற்றுடன் தொடர்பு உடையவர்கள் நல்ல லாபம் அடைவர் . சிறு தொழில் புரிபவர்கள் மற்றும் குறுந்தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்கள் உற்பத்திக்கு ஏற்ற லாபம் வருவதில் நிறைய தடைகள் இருப்பதால் உற்பத்தியின் அளவை குறைத்துக் கொள்ளுதல் வேண்டும் . ஆசிரியர் , நீதித்துறை , சட்டத்துறை , வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் இருப்பவர்கள் மருத்துவர் மற்றும் மத சம்பந்தமான துறைகளில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருத்தல் வேண்டும் .

கமிஷன் ,ஏஜென்சி , ப்ரோக்கர்ஸ் , செய்தி , தகவல் , பத்திரிகை , சின்னத்திரை , பெரியத்திரை , சாப்ட்வேர் , ஹார்டுவேர் துறையில் இருப்பவர்கள் , ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்கள் , ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் லாபம் அடைவர் .

அன்னை "ஸ்ரீ சாமுண்டீஸ்வரியையும்" ஸ்ரீனிவாசப் பெருமாளையும் வணங்கி வர எதிர்பார்த்த நற்பலன் கூடி வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் அமையும் .
மேலும் இங்கே தொடர்க...

மீனம் 01.01.2011 இருந்து 31.12.2011 வரை









தெய்வ சிந்தனையும் ஆன்மிக பலமும் உடைய உங்களுக்கு இவ்வாண்டு பெயர் , புகழ் , செல்வாக்கு ஓரளவு அதிகரிக்கும் .எப்பொழுதும் சுறு சுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவீர்கள் . எடுத்த காரியங்களில் வெற்றி பெற கடுமையாக போராடி இறுதியில் வெற்றி பெறுவீர்கள் .

ஆரம்பகல்வி பயிலுபவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற சந்தர்ப்பம் அமையும் . ஒரு சிலருக்கு ஆடை , ஆபரணங்கள் அடிக்கடி வாங்க வாய்ப்பு அமையும் . பேச்சில் மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் மற்றவர்களுடன் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும் . உடன் பணிபுரிபவர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும் . கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் கையில் கணிசமாக மிச்சமாகும் . அதன் மூலம் எண்ணிய எண்ணம் ஓரளவு ஈடேறும் .

உடன் பிறந்த சகோதர சகோதிரிகளால் பிரச்சனையும் அதே சமயம் அவர்களால் எதிர்பாராத நற்பலன்களும் ஏற்படும் . நெருங்கிய உறவினர்களை இழக்க வேண்டி வரும் . எடுத்த காரியங்களில் முயற்சியும் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் சதா எதையாவது முயற்சி செய்து கொண்டோ அல்லது படித்து கொண்டோ இருக்க வாய்ப்பு ஏற்படும் . எழுவதில் , கலைத்துறையில் ஆர்வமும் , திறமையும் அதிகரிக்கும் . போட்டித்தேர்வு , நேர்முகத்தேர்வில் வெற்றி ஏற்படும் . அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . பயணங்கள் ஒரு சில சமயங்களில் வெற்றியும் சில சமயங்களில் தோல்வியும் ஏற்படும் . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை . தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை .

உயர் கல்வியில் நல்ல மதிப்பெண் பெறவும் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் . இடம் , மனை , வீடு நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும் . பழைய வண்டி வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்க வாய்ப்பு அமையும் . வேலை பிடிக்காமல் அடிக்கடி கம்பெனி மாறுவதைத் தவிர்த்தல் நல்லது . உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் உற்பத்தியான பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க பெறுவர் .

பங்கு சந்தையில் இருப்பவர்கள் பெரிய அளவில் முதலீடு செய்வதைக் குறைத்து கால சூழ் நிலைக் கேற்றப்படி முதலீடு செய்வது நல்லது . இதுவரை குடும்பத்தில் நடக்காமல் தள்ளிப்போன சுப காரியங்கள் இனி நடக்க வாய்ப்பு கூடும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்திற்கு அனுகூலம் கிட்டும் . காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாக அமையும். ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் , கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் , வருமானம் கிட்டும் . ஒரு சிலருக்கு வாழ்க்கையில் போராட்டங்களும் அவமானங்களும் அடைய நேரிடும் . வேலையில் இருப்பவர்கள் அடிக்கடி விடுமுறை போட வேண்டிவரும் . எனவே மிக அதிக கவனம் தேவை . தேவையில்லாமல் விடுப்பு எடுத்தல் கூடாது . இதுவரை கிடைக்காமல் தள்ளிப்போன விசா சீக்கிரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் .

வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் . கிடைத்த வேலையிலும் திருப்தி இராது இருப்பினும் கிடைத்த வேலையில் மிக அதிக கவனம் செலுத்தவும் . நல்ல கம்பெனிக்கு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சற்று காலம் தாழ்த்தி நல்ல கம்பெனி அமையும் . ஒரு சிலருக்கு வேலையின் காரணமாக அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்பு அமையும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும் . ஒரு சிலருக்கு அரசாங்க உதவி மற்றும் உதவிப் பணம் கிடைக்கப் பெறும் . கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும் . கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேரும் தலை , கண் , மார்பு , அடிவயிறு , முழங்கால் போன்ற உடல் பாகங்களில் நோய் ஏற்பட்டு விலகும் . எனவே உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை . ஒரு சிலருக்கு கடன் வாங்கி , வீடு , வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும் .

இதுவரை தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்பு ஏற்படும் . சுய தொழில் புரிபவர்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தொழில் செய்ய வாய்ப்பு அமையும்.ஓரளவு எதிபார்த்த லாபம் அமையும் . வழக்குகள் வெற்றிகரமாக அமைந்தாலும் அதில் எதிர்பார்த்த திருப்தி இராது . ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் .

மனைவியின் மூலம் தனவரவு அல்லது முன்னோர்களின் முலமாக பொருள்வரவு எதிர்பாராத விதமாக அமையும். ஒரு சிலருக்கு அரசாங்கத்தால் தண்டிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் . அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் . ஆனால் கடுமையாகப் போராடியே அந்த வெற்றி கிட்டும் . விவசாயத் தொழில் புரிபவர்களுக்கு அரசின் ஆதரவும் எதிர்பார்த்த நல்ல லாபமும் ஏற்படும்.

மருத்துவம் ,பொறியியல் , நீதித்துறை மற்றும் நிதித்துறை அரசு ஊழியர்கள் ஏற்றம் பெறுவர் . செய்தி , போக்குவரத்து , தகவல் தொடர்பு , சாப்ட்வேர் ,ஹார்டுவேர் , எலெக்ட்ரிக்கல் , எலெக்ட்ரானிக்ஸ் ,ஓட்டல் , ரியல் எஸ்டேட் ,கமிஷன் ,ஏஜென்சி தொழிலில் இருப்பவர்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறுவர் .

ஆடை, ஆபரணத் தொழில் ,பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் . வாகன ஓட்டுனர்கள் , வாகன உரிமையாளர்கள் தொழிலில் கவனம் தேவை . பழம் , பூ , காய்கறி மற்றும் உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர் , சிறு மற்றும் குறுந் தொழில் புரிபவர்கள் , தெருவோரம் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த அளவு ஏற்றம் பெறுவர் .

ஸ்ரீ புவனேஸ்வரியையும் , யோக நரசிங்கப் பெருமாளையும் வணங்கி வர வாழ்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்பட்டு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் , சந்தோஷகரமாகவும் அமையும்.
மேலும் இங்கே தொடர்க...

Jan 28, 2011

லக்கணப் பலன்கள்




1. மேஷ லக்கினம்

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் செல்வ சீமான்களாக சிறந்து விளங்குவார்கள். பொருள் சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பிறரிடம் அன்பாகவும் நல்ல முறையிலும் பழகுவார்கள். பலர் போற்றிப் புகழும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் துரிதப் போக்கை உடையவர்கள். மற்றவர்களுடைய ஏச்சுப் பேச்சுகளை லட்சியம் செய்ய மாட்டார்கள். ஆடை ஆபரண விஷயத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும்எந்த நிலையிலும் இருக்க விரும்பக் கூடியவர்கள்.பிறருடைய நற்குணங்களைப் பாராட்டி அவர்களுடைய தகுதிக்குத் தக்க ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பார்கள். இவர்களிடம் பெரும்பாலோருக்கு மத்திம ஆயுளே பிரதானமாகக் கருதப்படுகிறது.

2.ரிஷப லக்கினம்

ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்கள் செல்வ சீமானாக வாழக் கூடியவராவார்கள். அன்பான மனைவி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள் ஆவார்கள். கணிதத் துறையில் வல்லவர் எனப் பெயர் எடுப்பார். இவர்களிடம் சூது, வாது, வஞ்சனைகள் குடி கொண்டிருக்கும். உண்மை பெருவாரியாக இல்லாத இடத்தில் இப்பிரிவினர் உண்மைக்குக் புறம்பான கட்சியின் பக்கம் சாயக் கூடியவர்கள் ஆவார்கள். இவர்களுக்குப் புத்திரப்பேறு குறைந்தும் அல்லது இல்லாமலும் போகும். ஆண்கள் தமது வயதுக்கு மூத்த பெண்களை மணந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். இப்பிரிவில் பெரும்பாலோர் கலைத்துறையில் ஈடுபட்டு இருப்பார்கள்.

3. மிதுன லக்கினம்

மிதுன லக்கினத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவர். பிறரிடம் வெளிபடையாகக் கூச்சமின்றிப் பேசக் கூடியவர். இவர்களுக்குக் கணிதத்தில் புலமை உண்டு. கற்பனை சக்தி அதிகம் உடையவர். பெண்கள் வகையில் இவர்களுக்கு நாட்டமும் ஈடுபாடும் ஏற்படும். சிலர் அவர்களின் மூலம் ஆதாயத்தையும் அடைவர். இந்த லக்கனக்காரர்கள் வீம்புக்காக அதிகப் பொருள் செலவு செய்து வாதத்தில் ஈடுபடுவார்கள். அதில் வெற்றியும் அடைவார்கள். இவர்களுக்குப் பணம் பெரிதல்ல, புரட்சி புருஷர்கள் எனலாம்.

4. கடக லக்கினம்

கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் ஏற்றத் தாழ்வு வாழ்க்கையை உடையவர்கள் ஆவார்கள். அரசியலில் பெரும் பங்கு கொண்டவர்கள் எனலாம். இவர்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதைவிட வெளி வட்டார நிகழ்ச்சிகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள். இவர்களை பிறர் எளிதில் ஏமாற்ற முடியாது. இவர்களுக்குப் பொருள் வளத்தைவிட புகழ் மாலை அதிகம் கிடைக்கும். இப்பிரிவினர்கள் எத்துறையிலும் சிறந்து விளங்குவார்கள். பொருளாதாரப் பிரச்சனை அடிக்கடி ஏற்படும். இவர்கள் மன்னிக்கும் சுபாவம் உடையவர்கள். தான தருமம் செய்வதில் தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.

5. சிம்ம லக்கினம்

சிங்கத்தைக் கண்டு பயப்படாத மிருகங்கள் உண்டா அதைப்போல் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களைக் கண்டு பிறர் இவரை நெருங்க கொஞ்சம் தயங்குவது உண்டு கம்பீரமான தோற்றம் உடையவர்கள். திடபுத்தி உடையவர்கள். முன்கோபமும் இடை இடையே ஏற்பட்டு மின்னல் வேகத்தில் மறையும். இவர்கள் மன்னிக்கும் சுபாவம் உடையவர்கள். இவர்களுக்கும் பொருளாதாரப் பிரச்சனை அடிக்கடி குறுக்கிடும்.இவர்கள் நினைத்ததை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஆயினும்,"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை" என்ற பழமொழிப்படி இவர்களுக்கு யாராவது ஒரு ஆரம்ப கர்த்தா உடன் இருக்க வேண்டும். இவர்களுக்கு சேமிப்பு சுகப்படாது. பெரும்பாலும் மாமிச உணவு வேட்கை உடையவராக இருப்பார்கள். இவர்கள் தமது கொள்கை,மதம் போன்றவைகளில் தீவிரப் பற்று உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

6. கன்னி லக்கினம்

கன்னி லக்கினத்தில் பிறந்தவர்கள் பேச்சிலும் அளந்து பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எப்போதும் வியாபார நோக்கம் காணப்படும். கல்வி முற்றுப் பெறாமல் தடைப்பட்டு இருக்கக் கூடியவர்கள். பொருள் சேர்ப்பதில் வல்லவர்கள். சிக்கனமும் கஞ்சத்தனமும் இவர்களிடம் குடி கொண்டிருக்கும்.’ உதவி என்பது இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.சிறு உதவிக்குக் கூடி இவர்களிடம் பல நாள் காத்திருந்து பொறுமையைக் கையாள வேண்டி இருக்கும். நயவஞ்சகப் பேச்சால் மற்றவர்களுடைய பொருளைக் கவரக் கூடியவர்கள். இவர்கள் பயன் கருதியே தமக்கு நண்பர்கள் பலரை சேர்த்துக் கொள்வார்கள். இவர்கள் அளவான குடும்பத்தை உடையவர்கள்.

7. துலா லக்கினம்
துலா லக்கினத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலோர் வியாபாரத் துறையில் ஈடுபட கூடியவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வியாபாரத் துறையில் அதிக சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள்,செல்வம் சேர்ப்பதில் சமர்த்தர்களாக இருப்பார்கள். இந்த லக்கினக்காரர்களுக்கு இயற்கையாகவே நீண்ட ஆயுள் ஏற்படும். இவர்களிடமும் சூது வஞ்சனை மறைந்திருக்கும். கூட்டு வியாபாரத்தில் மிக்க லாபம் அடையக் கூடியவர்கள். இவரிடம் கூட்டு சேரும் வேறு லக்கினக்காரர் இவருக்குக் கீழ்ப்படிந்தே இருக்கக் கூடிய நிலை ஏற்படும்.பொதுவாக இரும்பு எந்திரம், லாரி டிரான்ஸ் போர்ட், அச்சுத்துறை இரும்பு, கட்டிட கான்ட்ரக்ட் போன்றவைகளில் இவர்களுக்கு ஜீவனம் அமையும்.

8. விருச்சிக லக்கினம்

விருச்சிக லக்கினம் விஷராசி என்பதால் இந்த லக்கனக்காரர்கள் கொஞ்சம் விஷமத் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். கல்வி கேள்விகளிலும் நுணுக்கங்களிலும் வல்லவர்களாக இருப்பார்கள். பெண்கள் பால் பற்றுடையவர்கள். ஆதரவு குணமும் முன்கோபமும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் சரளமாக செல்வம் சேரும். கலகம் செய்யக்கூடிய மனப்பான்மை எப்போதும் இருக்கும். இவர்கள் அறியாமையினால் செய்யும் சிறு தவறுகள் கூட மற்றவர்களுக்குத் தீங்காய் முடியும். “சித்தம் போக்கு சிவம் போக்கு" என்றபடி இவர்களாக விரும்பினால் தாராளமாக தர்மம் செய்வார்கள். மொத்தத்தில் நடுத்தரப் போக்கு உடையவர்கள் என்றே சொல்லலாம்.

9. தனுசு லக்கினம்

தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவுள்ளவர்கள்.சொத்துக்கள் உடையவர். பிறரிடம் இனிமையாகப் பழகக் கூடியவர்கள். சிக்கனக்காரர்கள்,தர்ம குணமும் உடையவர்கள்.உறவினர்களுடன் சுமுகமான உறவு வைத்திருப்பார்கள். இப்பிரிவினர்கள் பலதரப்பட்ட வியாபாரங்களில் ஈடுபடக் கூடியவர்களாக இருப்பார்கள். அதிக லாபம் எதிர்பாராமல் நியாயமான வழியில் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சில சமயம் பொருளாதாரத் தட்டுப்பாடு இவர்களுக்கும் ஏற்படக் கூடும். என்றாலும் எப்படியும் சமாளித்து விடுவர். நல்ல குடும்ப அமைப்பு உடையவர். அரசாங்க விருதுகளும் பெறக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. மகர லக்கினம்

மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் பலதரப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவார்கள். விதவிதமான ஆடை ஆபரணம் வஸ்திரம் போன்றவைகளை அணிந்து மகிழக் கூடியவர்கள். பிறன் மனை விழையக்கூடிய பண்பும் இவர்களிடம் உண்டு சாதுரியமாகப் பேசக்கூடியவர்கள். முன்னேற்றம் கருதிப் பல திட்டங்களைப் போட்டு அதில் வெற்றியும் காணக் கூடியவர்கள். இப்பிரிவினர்களில் பெரும்பாலோர் கலைத் துறைகளான சங்கீதம், நடனம்,நாடகம்,சினிமா போன்றவைகளில் ஈடுபடக் கூடியவர்கள். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக நாட்டம் ஏற்படும். இவர்களில் ஒரு சிலருக்கு கடின சித்தம் ஏற்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட தாரங்கள் அமைவது உண்டு.

11.கும்ப லக்கினம்

கும்ப லக்கினத்தில் பிறந்தவர்கள் மனைவியின் மீது அதிகப் பற்று உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குப் புத்திரப் பேறு ஏற்படக் கால தாமதமாகும். சிலருக்குப் புத்திரப் பிராப்தி ஏற்படாமல் போகும். இவர்கள் தற்புகழ்ச்சி கொண்டவர்கள் தற்பெருமை கொண்டவர்கள். பெரும்பாலோர் பல திறப்பட்ட நியாயத்தில் ஈடுபட்டு நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவர்களுக்குத் திருமணம் கால தாமதமாக நடைபெறும். நல்ல செல்வம் சேர்க்கக் கூடியவர்களாகவும், நல்ல குடும்ப அமைப்பை உடையவர்களாகவும், விளங்குவார்கள். கல்வி கேள்விகளில் அதிக ஈடுபாடு ஏற்படாது.ஆயினும் உலக அறிவு நிறையப் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக வியாபாரத் தந்திரம் நிறையப் பெற்றவர்கள் என்றால் அது மிகையாகாது.தர்மகுணம் உடையவராயினும் சோதிக்கும் மனப்பான்மை இவரிடம் நிறைய உண்டு.

12. மீன லக்கினம்

மீன லக்கனத்தில் பிறந்தவர்கள் பூர்வீக சொத்தை அழித்து விடுவார்கள். அல்லது அதை மாற்றித் தமது பொருளாக ஆக்கிக் கொள்வார்கள். இவர்கள் ஏழ்மை நிலையில் இருந்த போதிலும் எப்படியாவது சிறுக பொருள் வந்து சேர்ந்துவிடும். இவர்களிடமிருந்து எந்த ரகசியத்தையும் நாம் அறிந்து கொள்ளமுடியாது. இவர்களுக்குப் பெரும்பாலும் பெண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். இவர்களது போக்கை அறிந்து கொள்வதே மிகவும் கடினமாக இருக்கும். தாராள மனப்பான்மை உடையவராய் இருந்த போதிலும் நடைமுறையில் சிறிது கஞ்சத்தனமாக நடந்து கொள்வார்கள். மொத்தத்தில் இவரால் மற்றவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது
மேலும் இங்கே தொடர்க...

Jan 13, 2011

குருபெயர்ச்சி




சுயமரியாதையின் சொந்தக்காரர்களே, படிப்பறிவைக் காட்டிலும் பட்டறிவு அதிகமுள்ளவர்களே, சபையாக இருந்தாலும், சத்திரமாக இருந்தாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டி லும் விரய வீட்டிலும் மாறி மாறி இருந்தாலும் பணவரவுக்கு குறைவில்லாமலும், வசதி வாய்ப்புகளையும், பிரபலங்களின் நட்புறவையும் ஏற்படுத்திக் கொடுத்த குரு பகவான், 21.11.2010 முதல் 7.5.2011 வரை நீடிப்பதால் கட்டி முடிக்கப்படாமல் இருந்து வந்த வீட்டை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.

புது வீட்டில் குடிபுகுவீர்கள். அடிக்கடி காசைக் கரைய வைத்த வாகனத்தையும் இனி மாற்றுவீர்கள். உற்றார், உறவினரிடம் கைமாற்றாக வாங்கியிருந்த பண த்தை தந்து முடிப்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். பழமை வாய்ந்த வெளிமாநில புண்ணிய
தலங்கள் சென்று வருவீர்கள்.

வீண் வறட்டுக் கௌரவத்திற்காக செலவு செய்து சேமிப்புகளை கரைத்துவிடாதீர்கள். மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். கர்ப்பப்பைக் கோளாறு, ரத்த அழுத்தம் வரக்கூடும். பிள்ளைகளை அடித்துத் திருத்தாமல் அனுசரணையாகப் பேசி அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மகளின் கல்யாணத்தில் அலைச்சல் கூடுதலாகவே இருக்கும். ஆனால், நல்லவிதத்தில் திருமணத்தை முடிப்பீர்கள்.

குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் உடம்பில் ஏதோ பெரிய நோய் இ ருக்கிறது என்றிருந்த பயம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். சண்டைக்கு வந்தவர்களைக்கூட சமாதானமாகப் பேசி நண்பர்க ளாக்கி விடுவீர்கள். வீண் குழப்பங்கள், மன உளைச்சல் நீங்கும்.

குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8வது வீட்டைப் பார்ப்பதால் திட்டமிடாத பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களாலும், அந்நிய நாட்டினராலும் உதவியுண்டு. அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் நீங்கும். குலதெய்வக் கோயிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். பழைய வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் நகருக்கு அருகில் வீட்டு மனை வாங்கும் வாய்ப்புள்ளது. லோன் கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்கில் வெற்றியுண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் ஜீவன, லாபாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சுபச் செலவுகள் வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். ஆனாலும், சனி பகவான் உங்களுக்கு பாதகாதிபதியாக இருப்பதால் திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள், விரக்தி, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, சோர்வு, உடல் வலி வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தைரிய, நோய் ஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செ ல்வதால் உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மற்றவர்கள் மதிக்கும்படியாக பொது காரியங்களை முன்னின்று செய்வீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதுக் கடன் வாங்குவீர்கள். வாகன விபத்து, வீண் பகை, பழிச்சொல்லுக்கு ஆளாவீர்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நெஞ்சுவலி, முதுகுவலி வந்து நீங்கும். புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க
வேண்டாம்.

வியாபாரிகளே, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்காமல் புதுவிதமாக யோசியுங்கள். போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். வெகுநாட்கள் ஆகியும் வசூலாகாமல் இருந்த பாக்கிகளெல்லாம் இனி வசூலாகும். கொடுக்கல்&வாங்கலில் நிம்மதி ஏற்படும். பலவகையில் கடன் வாங்கி புது முதலீடுகளைப் போட்டு கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள்.
வேலையாட்கள் நெருக்கமாக இ ருந்தாலும் வியாபார ரகசியங்களைக் காப்பது நல்லது. ஹோட்டல், கமிஷன், பார்மஸி வகைகளால் லாபமடைவீர்கள்.

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவு வார்கள். கூட்டுத்தொழில் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும். வளைந்து கொடுத்துப் போகப்பாரு ங்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

உத்யோகஸ்தர்களே, பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வே ண்டியது வரும். மேலதிகாரிகளிடம் கோபப்படாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நு ழைக்காதீர்கள். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! ஆசை வார்த்தைகளைக் கேட்டு காதலில் சிக்காதீர்கள். மேல்படிப்பில் அக்கறை காட்டுங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி வரக்கூடும்.

மாணவர்களே! விளையாடியது போதும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் அநாவசியப் பேச்சு வே ண்டாம். கணிதம், அறிவியல் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். கலைஞர்களே! கிசுகிசுக்கள், வீண் வதந்திகள் என்று உங்களை தொடர்ந்ததல்லவா, இனி கொஞ்சம் ஓயும். உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். இருந்தாலும் மூத்த கலைஞர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகளே, கட்சித் தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படாதீர்கள். சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். தேர்தலில் வெற்றியுண்டு. விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். வீட்டில் விசேஷம் நடக்கும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுக்க வேண்டுமென்பதை உணர வைக்கும்.

பரிகாரம்:

தஞ்சாவூர் திருவையாறுக்கு அருகேயுள்ள திருப்பூந்துருத்தியில் அருள்பாலிக்கும் புஷ்பவனநாதரையும், வீணா தட்சிணாமூர்த்தியையும் புனர்பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...

குருபெயர்ச்சி





ஏமாளிகள் மற்றும் அப்பாவிகளுக்காக பரிந்து பேசுபவர்களே, கரடுமுரடாக வாழ்க்கை அமைந்தாலும் சரி ளக்காமல் பயணிப்பவர்களே, ஓயாத உழைப்பால் சாதனை பட்டியலில் இடம் பிடிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து படாதபாடு படுத்தியும், 11ம் வீட்டில் கொஞ்ச காலம் இருந்து ஓரளவு பணவரவையும் கொடுத்து வந்த குரு பகவான், இப்பொழுது 21.11.2010 முதல் லாப வீட்டிற்குள் நுழைந்து 7.5.2011 வரை நீடிப்பதால் பதுங்கியிருந்த நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். சாதாரண வேலையைக்கூட முடிக்க முடியாமல் திணறினீர்களே! வரவேண்டிய பணமும் வராமல் தவித்தீர்களே! இனி எல்லாம் மாறும். பழைய கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனி அடுத்தடுத்து நடக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிப்பீர்கள். அலைச்சல் ஒருபுறம் இருந் தாலும் ஆதாயமும் உண்டு. உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பகவான் தனது 5ம் பார்வையால் பார்ப்பதால் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். இளைய சகோதரர் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தங்கைக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும்.

குரு தனது 7ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை இல்லையே என்று கோயில் கோயிலாக ஏறி இறங்கிய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மகனின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். பணப் பற்றாக்குறையினால் பாதியிலே நின்ற வீடு கட்டும் வேலையை முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தை தொட்டாலே பிரச்னைகள் வெடித்ததே, இனி அதற்கான தீர்வு கிடைக்கும். தாய்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு.

குரு பகவான் 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். புது தெம்பு பிறக்கும். கடினமான வேலையைக்கூட இனி எளிதாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். அடிமனதிலிருந்த பய உணர்வு நீங்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை தாக்கிப் பேசியவர்கள் இனி புகழ்வார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி முதல் மரியாதை கிடைக்கும். பழுதான எலக்ட்ரிக்கல் சாதனங்களை தூர எறிந்துவிட்டு புதியது வாங்குவீர்கள். உங்களின் வெளிப்படையான பேச்சால் தடைபட்ட சில வேலைகள் விரைந்து முடியும்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களுக்கு அஷ்டம லாபாதிபதியான குரு பகவான், தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வீண் செலவு, மனக்கவலை, ஏமாற்றம், அலைச்சல், திடீர் பயணங்கள், சகோதர ருடன் மனத்தாங்கல், சிறு சிறு விபத்துகள் என வரக்கூடும். அரசுக் காரியங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். சிறுநீரக நோய்த்தொற்று, சருமத்தில் நமைச்சல் வரக்கூடும். குடும்பத்தில் ஏற்படும் வீண்விவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தரவேண்டாம்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் பாக்ய, ஜீவனாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். வீண் பயம், தாழ்வுமனப்பான்மை விலகும். திருமணம், கிரகப் பிரவேசம் சிறப்பாக முடியும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சொத்து சேரும். உடல் ஆரோக்யம் மேம்படும். சொந் தமாக வீடு கட்டுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு வெற்றியடையும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இந்த காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தன, பூர்வ புண்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். பிள்ளை களின் கல்வி, திருமணம், உத்யோகம் திருப்திகரமாக அமையும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். வெளிமாநில பு ண்ணியதலங்கள் சென்று வருவீர்கள். வேற்று மொழிக்காரர்களால் அனுகூலம் உண்டு.

வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். செய்ய முடியாமலிருந்த சில மாற்றங்களை இப்போது செய்வதுடன், புதிய முதலீடுகளும் செய்வீர்கள். இடவசதியில்லாமல் தவித்தீர்களே! கடையை விசாலமான இடத்திற்கு மாற்றுவீர்கள். புதுப்புது சலுகைகளை அறிவிப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றி அனுபவம் மிகுந்தவர்களை சேர்ப்பீர்கள்.

உத்யோகஸ்தர்களே, உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். வேலைச்சுமை குறையும். தலைமை பொறுப்புக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை நிரூபிப்பீர்கள். சக ஊழியர்களிடம் செல்வாக்கு கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வேறு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும். அயல்நாட்டிலிருந்தும் சில வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத்துணை அமையும். மாணவர்களே! நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்கல்வியில் எதிர்பார்த் தபடி அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவீர்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

கலைஞர்களே! வீண் வதந்திகளும், அவப்பெயர்களுமே வந்ததே. இனி உங்களின் படைப்புகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரிக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே, தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத் திற்கு தெரிவியுங்கள். தலைமைக்கு நெருக்கமாவீர்கள். உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும்.

விவசாயிகளே, வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகில் வைத்திருந்த பத் திரத்தை மீட்பீர்கள். வங்கியில் கடன் கிடைக்கும். பழுதான மோட்டார் பம்புசெட்டை புதிதாக மாற்றுவீர்கள். இந்த குரு மாற்றம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதுடன், வருங்கால நிம்மதிக்கான வசதி வாய்ப்புகளையும் அமைத்துத் தரும்.

பரிகாரம்:

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டையில் இருந்து 2 கி.மீ. தொலைவில், உளுந் தாண்டார் கோயிலில் அருள்பாலிக்கும் மாஷபுரீஸ்வரரையும், அத்தல தட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். முதியோருக்கு கம்பளி வாங்கிக் கொடுங்கள்.
மேலும் இங்கே தொடர்க...