Mar 1, 2011

துலாம் 01.01.2011 முதல் 31.12.2011









எப்பொழுதும் உண்மையும் நேர்மையும் வெற்றியை மட்டும் விரும்பும் உங்களுக்கு இந்த புத்தாண்டு ஓரளவு நற்பலன்களை அளிக்க வல்லதாகும் . தங்களது புகழ் , கௌரவம் , அந்தஸ்து , பேசப்படும் வகையில் அமையும் . இதுவரை காலம் தாழ்த்தி வந்த பலன்கள் உடனடியாக நற்பலனாக நடக்க ஆரம்பிக்கும் . எதிர்நீச்சல் போட்டு ஜெய்க்க வேண்டிய காரியம் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும் .

கஷ்டப்பட்டு உழைக்கும் உங்களுக்கு கையில் வந்து சேர்ந்து சுப விரையமாக செலவாகும் . மேலும் இடம் மனை வீடு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும் . ஆரம்பக்கல்வி பயில்பவர்கள் படிப்பில் மிக அதிக கவனம் தேவை . இல்லையேல் கல்வியில் தடை ஏற்பட்டுப் பின் தொடர வாய்ப்பு அமையும் . பேச்சில் கவனமாக இருத்தல் வேண்டும் . தேவையில்லாமல் பேசுவது தேவையற்ற பிரச்சனைகளை உண்டு பண்ணி விடும் . எனவே பேச்சை குறைக்கவும் . ஒரு சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும் .முன்னோர்கள் சொத்து அல்லது மனைவி மூலம் பொருள்வரவு ஒரு சிலருக்கு கிடைக்கும் .

அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும். வீடு மற்றும் ஊர் மாற்றம் ஏற்படும் . பழைய வீட்டை விற்று விட சந்தர்ப்பம் அமையும் .உடன் பிறப்புகளால் நன்மை ஏற்படும் . அவர்களுக்கு இதுகாறும் நடைபெறாமல் இருந்த சுபகாரியம் நடந்தேறும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும் . எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்பட சந்தர்ப்பம் அமையும் . புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கிடைக்கும் . உறவினர்களால் நன்மையும் நெருங்கிய உறவினர்களை இழக்க சந்தர்ப்பம் அமையும் . பகுதி நேரமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புதிய விஷயங்களை கற்க அல்லது படிக்க சந்தர்ப்பம் கூடி வரும் . தாயாரை விட்டு பிரிய நேரிடும் . தாயாரின் உடல் நலத்தில் மிக கவனம் தேவை . சிறுதொழில் வீட்டில் வைத்து தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர் . வங்கியில் வரவு செலவு செய்ய சந்தர்ப்பம் கூடி வரும் .

கல்வியில் நல்ல கவனம் தேவை . இல்லையேல் கல்வியில் தடை ஏற்படும் . எதிர்பார்க்கும் கல்லூரி கிடைப்பதிலும் தடை ஏற்படும் . பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பம் கிட்டும் . உடல் ஆரோக்கியத்தில் மிக அதிக கவனம் தேவை . ஆடை ஆபரணம் சேர்க்கைகள் ஏற்படும் . வீடு வீட்டு உபயோகப் பொருட்கள் வண்டி வாகனங்கள் வாங்க சந்தர்ப்பம் கைகூடிவரும் . விவசாயத்தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படினும் இறுதியில் நஷ்டமே மிகும் . எனவே விவசாயத்தில் மிககவனத்துடன் செயல்படுதல் வேண்டும் .

இதுகாறும் வீட்டில் தள்ளிப்போன சுபகாரியம் நல்ல படியாக நடந்தேறும் . சுபகாரியம் நடக்க சந்தர்ப்பம் கைகூடி வரும் . குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பரிகாரம் செய்ய குழந்தை பேரு கிடைக்கும் . கோவில் மற்றும் ஆன்மீக விஷயங்களில் மனம் ஈடுபட்டு அதில் சுப விரையம் ஏற்படும் . காதல் விஷயங்களில் ஒரு சிலருக்கு வெற்றியும் மற்றும் ஒரு சிலருக்கு அசிங்கமும் அவமானமும் ஏற்படும் . பங்குச்சந்தையில் ஆரம்பத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இறுதியில் ஓரளவு நல்ல லாபத்துடன் வாழ வழி வகை அமையும் . உல்லாசமாக சுற்றுலா செல்வதில் அநேகருக்கு சந்தர்ப்பம் கிட்டும் . அதே சமயமும் அதில் பிரச்சனைகளும் ஏற்படும் . அரசியலில் நிறைய இழக்க வேண்டி வரும் . வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும் . சமூகத்தில் பொது வாழ்க்கையில் தொண்டு நிறுவனங்களில் ஈடுபடுவோர்களுக்கு நல்ல பெயரும் புகழும் கிட்டும் .

இதுவரை வேலை இல்லாமல் நிம்மதி இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . வேலையில் ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் அமையும் . ஒரு சிலருக்கு பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு கம்பெனிக்கு வேலைக்கு செல்ல வாய்ப்பு அமையும் . பார்க்கும் வேலையில் முன்னேற்றமும் வெளிநாடுகளில் வேலை செய்ய சந்தர்ப்பமும் ஒரு சிலருக்கு கூடி வரும் . வேலையின் நிமித்தமாக வெளிநாடு செல்ல காலம் கனிந்தேறும் . போட்டித்தேர்வு , பந்தயத்தேர்வு , நேர்முகத்தேர்வில் நல்ல மதிப்பெண் மற்றும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி வரும் . உடலில் அடிவயிறு , கால் , பாதம் , இடது கண் , போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் . எனவே உடல் நலத்தில் மிக கவனம் தேவை .

திருமணம் தள்ளி போனவர்களுக்கு திருமணம் நடந்தேறும் . சுயதொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . விசா கிடைக்காமல் இருப்பவர்களுக்கு சற்று போராட்டத்திற்கு பின் விசா கிடைக்க சந்தர்ப்பம் அமையும் . நண்பர்களால் ஆதாயமும் பொருள் உதவியும் கிட்டும் . உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள சந்தர்ப்பம் அமையும் . ஆலய மற்றும் தெய்வ தரிசனம் அடிக்கடி அமையும் .

ஆடை , ஆபரணம் , நகை , ஜவுளி தொழில் எதிர்பாராத லாபத்தை தரும் . நீதி துறை , சட்டத் துறை , ஆசிரியர் துறை மற்றும் ஆராய்ச்சி அணு விஞ்ஞான துறையில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம் . போக்குவரத்து , செய்தி , தகவல்தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் , ஓட்டல் , கமிஷன் , ஏஜென்சி , ப்ரோக்கர் , ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் மேன்மை அடைவர் . சிறுதொழில் வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரம் புரிபவர்கள் ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் ஏற்றம் பெறுவர் . மருத்துவம் , பொறியியல் ,ராணுவம் , விமான சேவை புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர் .

அன்னை அகிலாண்டேஸ்வரியை வணங்கி வருதல் மூலமும் ஆஞ்சிநேயரை வணங்கி வருதல் மூலம் எதிர்பார்த்த நற்பலன் நடக்க வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் .

No comments:

Post a Comment