Jan 13, 2011

குரு பெயர்ச்சி


நல்லதோ, அல்லதோ... முடிவெடுத்து விட்டால் முன்வைத்த காலை பின் வைக்காமல் முடித்துக் காட்டுபவர்களே! வசதி வந்தபோதும் பழைய நட்பை மறவாதவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் கடந்த ஓராண்டு காலமாக 7ம் வீட்டிலும், 8ம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்ததால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறிப் போனீர்களே!

குரு வக்ரமானதால் பணப்பற்றாக்குறையாலும், சரியான தூக்கமில்லாமலும் தத்தளித்தீர்களே, இப்போது 21.11.2010 முதல் 7.5.2011 வரை எட்டாம் வீட்டிற்குள் நீடிப்பதால் முன்பு போலவே பெயர் கெடுமோ, எந்த வேலையையும் திறம்படச் செய்ய முடியாதோ என்றெல்லாம் வருந்தாதீர்கள். சரராசியில் பிறந்த உங்களுக்கு குரு பகவான் உபய வீட்டில் மறைவதுடன், தன் சொந்த வீட்டில் அமர்வதால் மேற்கண்ட காலகட்டங்களில் கெடு பலன் கள் குறைந்து நற்பலன்களே அதிகரிக்கும். எல்லா செயல்களில் இருந்த சுணக்கமும், தயக்கமும் இனி அறவே நீங்கும்.

அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் இனி முழுமையடையும். வரவேண்டிய பணம் வந்துசேரும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உடன் பிறந்தவர்கள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் மற்றும் குழப்பங்கள் நீங்கும்.

மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீங்கள் நல்லதே சொன்னாலும் சிலர் அதை தவறாக புரிந்து கொண்டார்களே, சில சமயங்களில் சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்ல முடியாமல் தடு மாறினீர்களே, அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். உங்கள் ஆலோசனையை அலட்சியப்படுத்தியவர்கள் இப்போது உங்களை மீண்டும் தேடி வருவார்கள். பணம் வரத்தான் செய்கிறது. ஆனால் ஏனோ தங்கவில்லை என புலம்பினீர்களே! இனி பணத்தை சேமிக்கும் வழியை கண்டுபிடிப்பீர்கள்.

பூர்வீகச் சொத்தையும் விற்றுவிட்ட கவலையில் இருந்தீர்களே, இனி புதுச் சொத்தை வாங்கிப் போடுவீர்கள். பழுதான எலட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல் சாதனங்களை மாற்றுவீர்கள். குரு பகவான் தனது 9ம் பார்வையால் உங்களின் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்யம் மேம்படும். மருந்து மாத்திரைகளின் அளவு இனி குறையும். வீண் அலைச்சல், டென்ஷன், களைப்பு, மன உளைச்சல் நீங்கும். தாயாருடன் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந் தீர்களே, இனி பாசமாக இருப்பீர்கள். தாயார் வழிச்சொத்து கைக்கு வரும்.

தண்ணீர் வசதியில்லாத, இடவசதியில்லாத வீட்டில் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி விசாலமான வீட்டிற்கு மாறுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக வேறு ஊர்களுக்கு மாற்றல் கேட்டுச் செல் வீர்கள். இதுவரை மறுக்கப்பட்ட உங்கள் ஆலோசனைகளை இனி வரும் காலங்களில் ஏற்றுக் கொள்வார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் நல்ல பதவி கிடைக்கும்.

கொஞ்சம் மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். விமர்சனங்கள், வதந்திகள் வரும். அதற்காக அஞ்ச வேண்டாம். உங்களிடம் இருக்கும் தலைமைப் பண்பை கண்டுபிடித்து சரியான உயர்பதவிகளில் உங்களை அமர வைப்பார்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4ம் பாதத் தில் செல்வதால் உங்களின் தகுதி, அந்தஸ்து உயரும். பதவிகள் தேடி வரும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் சப்தமாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் குடும்பத்தில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சில நேரங்களில் தாழ்வுமனப்பான்மை, தயக்கம் வரக்கூடும். வாகன விபத்துகள், வீண் செலவுகள், மறைமுக அவமானம், உறவினர்கள் மற்றும் பிரபலங்களுடன் பகையும் வந்து நீங்கும். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்கள் தன லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் தடைப ட்டுக் கொண்டிருந்த காரியங்கள் முழுமையடையும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். சொந்த ஊர் கோயிலில் கும்பாபிஷேகச் செலவில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்வீர்கள்.

வியாபாரிகளே, பழைய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புது திட்டம் தீட்டுவீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கோர்ட்டுக்கு போக வேண்டாம். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். டிசம்பர், மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இரும்பு, கெமிக்கல், ஏற்றுமதி இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டு த்தொழிலில் பங்குதாரர்களுடன் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகஸ்தர்களே, நீங்கள் திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மூத்த அதிகாரி புரிந்து கொள் ளவில்லையே என்று வருந்துவீர்கள். சக ஊழியர்களிடையே வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சக ஊழியர்கள் சொல் கிறார்களே என்று மேலதிகாரிகளைப்பற்றி குறை சொல்லாதீர்கள். புது வேலைக்கு மாறும்போது யோசித்து செயல்படுங்கள்.

கன்னிப் பெண்களே! திட்டவட்டமான முடிவுகளை எடுக்க முடியாமல் கொஞ்சம் தடுமாற்றமாகத்தான் இ ருப்பீர்கள். தவறான நட்பை ஒதுக்கி வையுங்கள். காதல் விவகாரங்கள் இப்போதைக்கு வேண்டாம். வியாபார நு ணுக்கங்களை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
மாணவர்களே! சதா விளையாட்டு என்றிருக்காதீர்கள். கொஞ்சம் படிப்பிலும் அக்கறை காட்டுங்கள். வகுப்பறையில் வீண் பேச்சைக் குறையுங்கள். கலைஞர்களே! கிசுகிசுக்கள், வதந்திகள் என்று ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளே, கட்சிப்பூசல், விமர்சனங்களில் தலையிடாமலிருப்பது நல்லது. சிலர் உங்களைப் பற்றி தலைமையிடம் தவறாகக் கூறுவார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். தலைமையிடமிருந்து எந்தக் கட்டளையும் வராமல் நீங்களாக எதையும் செய்யாதீர்கள். தனி நபர் விமர்சனங்களை தவிர்த்து விடுங்கள்.

விவசாயிகளே, வண்டுக்கடி, பூச்சிக்கடி, எலித் தொல்லை இருக்கும். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்து வந்த உரசல் போக்கு மாறும். பழைய பம்புசெட்டை மாற்றுவீர்கள்.இந்த குரு பெயர்ச்சி வாழ்க்கை போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான மன உறுதியை தருவதுடன் வி.ஐ.பிகளின் மனதிலும் இடம்பிடிக்க வைக்கும்.

பரிகாரம்:

நாகப்பட்டினத்தில் அருள்பாலிக்கும் காயாரோகணேஸ்வரரையும் அத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு.

No comments:

Post a Comment