Jan 13, 2011

குரு பெயர்ச்சி


உங்கள் ராசி, போர்க்கருவியான வில்லைக் குறிப்பதால் நினைத்ததை போராடியாவது பெற்று விடுவீர்கள். போராட்டம் இல்லையெனில் போரடிக்கிறது என்பீர்கள். சவாலான விஷயங்களை எல்லாம் சாதாரணமாக முடிப்பீர்கள். இதுவரை மூன்றாம் வீட்டிலும், நான்காம் வீட்டிலும் அமர்ந்து, தெளிவான பாதையில் அழைத்துச் செ ல்லாமல் திணறடித்த குரு பகவான், இப்பொழுது நான்காவது வீட்டிற்குள் நுழையப் போகிறார். 21.11.2010 முதல் 7.5.2011 வரை குரு பகவான் அங்கு நீடிப்பார். அதனால் கொஞ்சம் வேலைச்சுமை அதிகமாகவே இருக்கும்.

குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் கூட சண்டையில்தான் போய் முடியும். வீண் சந்தேகத்தால் கணவன் மனைவி பிரிய வேண்டியது கூட வரலாம். அதனால் விட்டுக் கொடுத்துப் போங்கள். சில விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்படாது அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். உயர் கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரம்பு மீறி அவர்களின் வீட்டு விவகாரங்களில் நுழைய வேண்டாம்.

நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். வாகன விபத்துகள் நிகழக்கூடும். தாயாருக்கு மூட்டுவலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து நீங்கும். ஆனாலும், குரு பகவான் உங்களின் சுக ஸ்தானத்தில் ஆட்சிபெற்று அமர்வதால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான சுயரூபத்தை உணர்வீர்கள். அவசரப்பட்டு ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பணத்தட்டுப்பாடு அவ்வப்போது தொடர்ந்தாலும், ஏதேனும் ஒருவழியில் அவற்றை சமாளிப்பீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். பால்ய நண்பர்களாக இருந்தாலும் உதவியென்று கேட்டு விட்டால் ஒதுங்கிவிடும் நிலைமை வரும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேசவேண்டாம். சில சமயங்களில் உங்களின் கோபதாபங்களை, கூடாப் பழக்க வழக்கங்களை உங்களின் மனைவி சுட்டிக் காட்டுவார். அதற்காக வருத் தப்படாதீர்கள். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளையும், நேரந்தவறி சாப்பிடுவதையும் தவிர்க்கப் பாருங்கள். அல்சர், வயிற்றில் கட்டி வரக்கூடும். சொத்து வாங்குவதில் ஏதேனும் வில்லங்கம் உள்ளதா என்று பலமுறை விசாரித்து வாங்குவது நல்லது.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இந்த காலகட்டங்களில் உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குரு பகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட் சத்திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையக்கூடும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் இரட்டிப்பாகும். சின்ன வேலையைக்கூட அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். எதிலும் ஒரு நாட்டமில்லாத நிலையும் வரக்கூடும். யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் தன, சேவகாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் பேச்சில் தடுமாற்றம், வீண் விவாதங்கள் வரக்கூடும். முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். தோலில் அலர்ஜி வரக்கூடும். 21.2.2011 முதல் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும். பழுதான வாகனத்தை மாற்றிவிட்டு லோன் மூலம் புது வண்டியை எடுப்பீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் சப்தம, ஜீவனாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கணவன் மனைவிக்குள் இருந்த இடைவெளி நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் இனி பாசமாக நடந்து கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நாடாளுபவர்களின் சந்திப்பு நிகழும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த ஊர் கோயில் விழாக்களை ஏற்று நடத்துவீர்கள். அயல்நாடு சென்று வர விசா கிடைக்கும்.

வியாபாரிகளே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பற்று வரவு உயரும். பெரிய முதலீடுகள் வேண்டாம். வரவேண்டிய பாக்கிகளை நாசுக்காக வசூலியுங்கள். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் இனி கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். ஆனாலும், அவர்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டி ருக்காதீர்கள்.

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய யுக்திகளைக் கையாளுங்கள். வியாபாரத்தை பெருக்க புதிய விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். ரியல் எஸ்டேட், கெமிக்கல் வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள்.

உத்யோகஸ்தர்களே, வேலைப்பளு வாட்டியெடுக்கும். சக ஊழியர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு பார்க்க நேரிடும். மேலதிகாரியிடம் மனஸ்தாபங்கள் அதிகரிக்கும். முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். அலு வலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. ஆனாலும் குரு பகவான் உங்களின் 10ம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். மார்ச், மே மாதங்களில் நிம்மதி கிட்டும். பதவி உயர்வு, புதிய வாய்ப்புகள் என தேடி வரும்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கப் பாருங்கள். தடைபட்ட கல்வியை போராடி முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். கனவு த்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியரின் கருத்துக்களை கேட்டு நடங்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பு எதுவாயினும் தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். சம்பளப் பிரச்னை வரும். கிசுகிசுத் தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். அரசியல்வாதிகளே, தலைமையோடு சிறு உரசல்போக்கு வந்து நீங்கும். ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண் டாம். தலைமையைப்பற்றி யாரிடமும் வீண் விமர்சனம் செய்ய வேண்டாம். கௌரவத்திற்காக வீண் செலவுகள் செய்ய நேரிடும்.

விவசாயிகளே, பயிர் காக்க நவீன ரக உரங்களை பயன்படுத்துங்கள். கூட்டுறவு வங்கிக் கடனுதவி கிடைக்கும். தானிய, பழவகைகளால் ஆதாயமடைவீர்கள். அடகிலிருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். இந்த குரு மாற்றம் அவ்வப்போது உங்களை கசக்கிப் பிழிந்தாலும் வருங்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

பரிகாரம்:

தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் பெருவுடையார் பிரகதீஸ்வரரையும், அத்தலத்திலேயே அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியையும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள்.

No comments:

Post a Comment