Jan 13, 2011

குரு பெயர்ச்சி


எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே, புரட்சிகரமான முடிவும், தொலை நோக்குச்
சிந்தனையும் கொண்டவர்களே, மந்திரியாக இருந்தாலும் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாகவும், கொஞ்ச காலம் 2ம் வீட்டிலும் அமர்ந்து நல்லதையும், கெட் டதையும் கலந்து கொடுத்த குரு பகவான் இப்பொழுது 21.11.2010 முதல் 7.5.2011 வரை 2ம் வீட்டில் நீடிப்பதால் அடிமனதிலிருந்த போராட்டம் நீங்கும்.

தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களிடமிருந்த சோம்பல், அலட்சியப்போக்கு மாறும். குடும்பத்தினர் உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தார்களே, இனி அந்த நிலை மாறும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேரு வீர்கள். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும்.

உங்கள் ராசிக்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போய்க் கொண்டிருந்த சுப காரியங்கள் இனிதே நடந்து முடியும். உங்களை கண்டும் காணாமல் போன உறவினர்கள் இனி தேடி வந்து உறவாடுவார்கள். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை&கால் வலி நீங்கும். பாதி பணம் தந்து கிரயம் முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகள் வந்ததே! இனி அந்த அவலநிலை மாறும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். தேவையில்லாமல் பேசி சில நல்ல ந ட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பாசமழை பொழிவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயமுண்டு.

குரு பகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங் கண் டறிந்து ஒதுக்குவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். குரு பகவான் தனது 7ம் பார்வையால் உங்களின் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடிவரும். உங்களால் பயனடைந்த சிலர் உங்களுக்கு உதவுவார்கள்.

குரு தனது 9ம் பார்வையால் உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசாங்க காரியங்களில் இருந்த தடுமாற்றம் நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள்.

குரு பகவானின் பாதச்சாரப் பலன்கள்

21.11.2010 முதல் 2.1.2011 வரை:

இக்காலகட்டங்களில் உங்களின் தன, லாபாதிபதியான குரு பகவான் தன்னுடைய நட்சத்திரமான பூரட்டாதி நட்சத் திரத்தின் 4ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. மூத்த சகோதரர் உதவுவார். இங்கிதமாகப் பேசி பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். பழைய சொத்துப் பிரச்னை தீர்வுக்கு வரும். வெளிநாட்டுப் பயணங்கள் திருப்திகரமாக அமையும்.

3.1.2011 முதல் 13.3.2011 வரை:

மேற்கண்ட நாட்களில் உங்களின் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் தடைபட்ட சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பழுதான டிவி., மிக்ஸி, வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். சகோதர, சகோதரிகளால் அலைச்சல், செலவுகள் உண்டு. பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும். உடம்பில் ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவை சரி பார்த்துக் கொள்வது நல்லது. முடிந்தவரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள்.

14.3.2011 முதல் 7.5.2011 வரை:

இக்காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பூர்வ புண்யாதிபதியும், அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத் திரத்தில் செல்வதால் மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திடீர் பயணங்களால் சேமிப்புகள் கரையும். பழைய உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள்.
வியாபாரிகளே, போட்டியாளர்களை சமாளிக்கும் அளவிற்கு புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள்.

வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கேற்ப சில மாற்றங்களை செய்யுங்கள். அதிக லாபம் ஈட்டுவீர்கள். விளம்பரம், ச லுகைகள் மூலம் பழைய வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். ம ருந்து, கமிஷன், மர வகைகளால் லாபமடைவீர்கள். வராமல் இருந்த பாக்கிகள் எளிதாக வசூலாகும். அனுபவம் வாய்ந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே, உங்களின் கடின உழைப்பையும், திறமையையும் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்கள் நல்ல பெயர் எடுத்தார்களே! அந்த அவலநிலை மாறும். இனி மேலதிகாரியின் கனிவுப் பார்வை உங்கள் மீது விழும். உங்களின் சம்பளம் உயரும். சக ஊழியர்கள் உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள். டிசம்பர், ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களே! மதில்மேல் பூனையாக நின்ற நிலை மாறும். காதல் தோல்வியால் துவண்டு போனீர்களே! அதிலிருந்து மீள்வீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும். தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் விமரிசையாக முடியும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களே! தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதாக சபதம் போட்டால் மட்டும் போதாது. அதற்காக கடின உழைப்பு வேண்டும். வகுப்பாசிரியரின் ஆதரவு கிடைக்கும்.

கலைஞர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் படைப்புகள் பலராலும் பாராட்டப்படும். சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகளே, தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பதவி கிடைக்கும். எதிர்க் கட்சியினரை ஆதாரமின்றி விமர்சித்துப் பேசாதீர்கள்.

விவசாயிகளே! இயற்கை உரம், செயற்கை உரம் என்று மாறி மாறி போட்டுப் பார்த்தும் மகசூல் இல்லாது தவித்தீர்களே, இனி மாற்றுப் பயிர் இடுவீர்கள். மகசூல் பெருகும். கடனை பைசல் செய்வீர்கள். இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் முன்னேற்றத்தையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவிடைமருதூரில் அருள்பாலிக்கும் மகாலிங்கேஸ்வரரையும், அத்தலத் தில் அருள் பெருக்கும் தட்சிணாமூர்த்தியையும் பூசம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். பசுவிற்கு அகத் திக்கீரை கொடுங்கள்.

No comments:

Post a Comment