Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-கும்பம்




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3
தாயின் ஆதரவு, - கடன் வாங்கும் நிலை


நல்லவர்களுக்கு துணை நிற்கும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 11ல் ராகு, 5ல் கேது, 8ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது. குருபகவான் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை மீன ராசியில் பிரவேசம் செய்கிறார். அஷ்டம சனியால் அனுபவிக்கும் சிரம பலன்கள் குறையும். பேச்சில் கனிவு அதிகரிக்கும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். வீடு, வாகன வகையில் தேவையான மாற்றங்களை செய்து மகிழலாம். தாயின் அன்பும், ஆசியும் பூரணமாக கிடைக்கும். புத்திரர்கள் படிப்பில் முன்னேறி சாதித்துக்காட்டுவர். சொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் ஒப்படைக்கக்கூடாது.
உடல்நலம் பேணுவதில் மிகுந்த அக்கறை தேவை. அலைச்சலால் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். பணவரவு சுமாராக இருக்கும். முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கடன்வாங்க நேரிடும். கடினமான பணிகளில் ஈடுபடுபவர்கள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது. மலைப்பிரதேசங்கள், ஆழமான நீர்நிலைகளில் மிகுந்த கவனம் தேவை. தந்தைவழி உறவினர்களுடன் நெருக்கம் அதிகமாகும். இளம் வயதினருக்கு வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் திருமண முயற்சிகள் கைகூடுவதற்கான குருபலன் சிறப்பாக உள்ளது. தொழில் சார்ந்த வகையில் இருந்துவந்த தடை நீங்கி சீரான முன்னேற்றமும் வருவாயும் பெறுவீர்கள். நீண்டகால நிலுவைப்பணம் அதிர்ஷ்டவசமாக வந்து சேரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பில் நல்ல அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: ரியல் எஸ்டேட், மருத்துவமனை, திருமண மண்டபம், ஓட்டல், லாட்ஜ், நிதி நிறுவனம் நடத்துபவர்கள், வாகனம், டெக்ஸ்டைல்ஸ், தோல், காகிதம், பிளாஸ்டிக், இரும்பு, தண்ணீர், இரும்பு சார்ந்த தொழில் செய்வோர் ஓரளவு லாபம் பெறுவர். பிற தொழில் செய்பவர்களுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம் கிடைக்கலாம். மறைமுக போட்டிகள் குறையும். பணியாளர்களை திருப்திப்படுத்த கூடுதல் செலவு உண்டாகும். நண்பர்கள் தொழில்நுட்ப உதவியினை மனமுவந்து செய்வர். வெளிநாட்டு ஆர்டர்எடுத்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளியூர், வெளிமாநில பணியில் உள்ளவர்களுக்கு பிரச்னைகள் குறையும். பணவரவில் முன்னேற்றம் தெரியும்.
வியாபாரிகள்: ஆட்டோமொபைல், கட்டுமானப் பொருட்கள், விவசாய விளைபொருட்கள், ரப்பர், ஸ்டீல் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மலைத் தோட்டப் பயிர், ஜவுளி, பழங்கள், இனிப்பு பொருட்கள், பர்னிச்சர், புத்தகம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், வாகன உதிரிப்பாகங்கள், இறைச்சி, பாத்திரம், எண்ணெய், காலணி வியாபாரிகள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் உண்டு. சரக்கு கொள்முதல் நடத்த புதிய நிறுவனங் களின் ஆதரவு கிடைக்கும். சரக்கு வாகனங்களால் பராமரிப்பு செலவு கூடும். பணியாளர்கள் ஒத்துழைப்பு குறைவு காரணமாக சிலர் புதியவர்களை அதிக சம்பளத்துக்கு தேட நேரிடும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மிக கவனமாக செயல்படாவிட்டால் குளறுபடி ஏற்பட்டு, பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் உங்கள் திறமை வெளிப்படும். இதனால் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். நிர்வாகத்திடம் புதிய சலுகைகளை பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களிடம் இருக்கும் மனவருத்தத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது. கொதிகலன், நெருப்பு சார்ந்த தொழில், எலக்ட்ரிக்கல், கனரக இயந்திரங்கள் ஆகிய பணியில் உள்ளவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் நிலவும் சூழ்நிலை சற்று சிரமமாக இருக்கும். சிலருக்கு வேண்டாத இடமாற்றமும், ஒழுங்கு நடவடிக்கையும் போன்ற அனுபவங்களையும் சந்திக்கலாம். குடும்பப் பெண்கள் செலவுக்காகத் திண்டாடினாலும், கணவரின் ஆதரவு காரணமாக நிம்மதியான மனநிலையைப் பெறுவர். கர்ப்பிணி பெண்கள் உடல்நலப்பாதுகாப்பில் சீரான அக்கறை அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் ஆண்டின் முற்பகுதியில் சிறப்பான வியாபாரமும், தாராள பணவரவும் கிடைக்கப் பெறுவர். தொழில் காரணமாக நீண்டதூர பிரயாணம் செல்ல நேரிடும். புத்திரர்களால் குடும்பத்தில் குதூகலத்தைக் காண்பீர்கள்.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், ரசாயனம், பவுதிகம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், சட்டம், ஜர்னலிசம், வங்கியியல், மார்க்கெட்டிங், நிதிமேலாண்மை, கேட்டரிங், கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு படிப்பு சுமாராக இருக்கும். மற்றவர்களும் மந்தநிலை காரணமாக படிப்பில் பின்தங்கலாம். மிகுந்த கவனம் கொண்டால் மட்டுமே தேற முடியும். படிப்புக்கான செலவுக்கும் சற்று சிரமம் உண்டாகும். சக மாணவர்களின் உதவியும் கிடைக்காது. வேலை வாய்ப்பு பெற எண்ணுபவர்களுக்கு அனுகூலமான நிலை உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற புகழ், அந்தஸ்தை பாதுகாக்க அதிகப்படியான முயற்சி தேவை. அரசியல் பணியில் புத்திரர்களை பயன்படுத்த வேண்டாம். வழக்கு, விவகாரத்தில் சாதகமான சூழ்நிலை உண்டு. எதிரிகள் விலகிச்செல்வர். ஆதரவாளர்களுக்காக பணச்செலவு அதிகரிக்கும்.
விவசாயிகள்: விவசாயப்பணி சீரடைந்து மகசூல் அதிகரிக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டு. கால்நடை வளர்ப்பில் லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு உண்டாகும்.
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்
பரிகார பாடல்:
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை
விரை குழவும் மலர்ப்பொழில் சூழ் வித்துவ கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே!

No comments:

Post a Comment