Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மகரம்




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
ஆன்மிக யோகம், - பதவி உயர்வில் தாமதம்


நேர்மையோடு பொருள் தேடும் மகரராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 12ல் ராகு, 6ல் கேது, 9ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது.
குருபகவான் அதிசார கதியாக மீனராசியில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ. 7) வரை பிரவேசம் செய்கிறார்.
மனதிலும் செயலிலும் சுறுசுறுப்பு அதிகரிக்கும். லட்சியங்களை அடைய முயற்சியுடன் பாடுபடுவீர்கள். பேச்சில் இனிமையும் சாந்தமும் கலந்திருக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பம் உருவாகும். சகோதர, சகோதரிகளுக்கு மங்கல நிகழ்ச்சிகளை நடத்தி பெருமை அடைவீர்கள். விருந்தினர்கள் வருகையால் கலகலப்பு உண்டாகும். உற்றார், உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். நீண்டநாளாக நிறைவேற்ற இயலாத நேர்த்திக்கடன்களை பூர்த்தி செய்து விடுவீர்கள். இஷ்ட தெய்வ பிரார்த்தனை நிறைவேறும். சிலருக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். வீடு, வாகன வகையில் அத்தியாவசிய மாற்றங்கள் தவிர வேறு மாற்றங்களை செய்வது செலவுக்கு வழிவகுக்கும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனமும் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல் உருவாகி மறையும். பூர்வீக சொத்தில் கிடைக்கும் வருமானம் பெருகும். புத்திரர்கள் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் பெறுவர்.
கடன் வழக்குகளில் இருந்த தொந்தரவு குறையும். அதிர்ஷ்டவசமாக ஆபரணம், பணம் கிடைக்கும் யோகம் உண்டு. உடல்நலம் சிறப்பாக அமையும். தம்பதியரிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடு மறைந்து பாச பந்தத்துடன் நடந்துகொள்வர். நண்பர்கள் உதவுவதும், உதவி பெறுவதுமான நற்பலன் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களை கேட்டுப் பெறுவதற்கு உகந்த காலம் இது. தொழில் சார்ந்த வகையில் கூடுதல் உழைப்பினால் தேவையான வளர்ச்சி நிலையை எட்ட முடியும். வெளிநாட்டு வேலை வாய்ப்பில் அனுகூலம் உண்டு.
தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கட்டுமான பொருட்கள், காகிதம், தோல், பிளாஸ்டிக், தண்ணீர், பெயிண்ட் உற்பத்தி செய்பவர்கள், ஓட்டல், லாட்ஜ், டிராவல்ஸ், ரியல் எஸ்டேட், பால்பண்ணை, அரிசி ஆலை அதிபர்கள் புதிய யுக்திகளை கடைபிடித்து ஓரளவு லாபம் அடைவர். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட திருப்தியான லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு இருக்கும். தொழிலில் இருந்த போட்டி பெருமளவு குறையும்.
வியாபாரிகள்: வாகன உதிரிபாகங்கள், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி, நகை, பலசரக்கு, பால் பொருட்கள், மீன், அழகு சாதன பொருட்கள், பாத்திர வியாபாரிகள், பிளாஸ்டிக், வாசனை திரவியங்கள், பெயின்ட், பர்னிச்சர் விற்பனை செய்பவர் களுக்கு போட்டி ஓரளவுக்கு குறையும். லாபம் சுமாராக இருக்கும். உற்சாகமாக செயல் படுவதால் மட்டுமே விற்பனை சரிவை ஈடுகட்ட இயலும். மற்ற துறை வியாபாரிகளுக்கும் ஓரளவுக்கே விற்பனை இருக்கும். பிறருக்காக எந்த விதத்திலும் பொறுப்பேற்பதோ, முன்ஜாமீன் போடுவதோ கூடாது.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் சிறு அளவிலான குளறுபடிகளை சந்திக்க நேரிடும். திறமைமிக்க சக பணியாளர் களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு, இடமாற்றம், பதவி உயர்வு, கடன் உதவி கிடைக்க தாமதமாகும். பணியிடங் களில் அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது பிரச்னைகளை பெருமளவில் குறைக்க உதவும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியிடங்களில் கவனக் குறைவு காரணமாக பிரச்னைக்கு ஆளாவர். அலுவலக சூழ்நிலை அறிந்து செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்க முடியும். குடும்பப் பெண்கள் கணவருடன் இணக்கமாக இருப்பர். வீட்டுச்செலவுக்கு ஓரளவுக்கே பணம் கிடைக்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனமும்கடின உழைப்பும் மேற்கொள்ள நேரிடும். பணவரவு அன்றாடச் செலவுக்கு போதுமானதாக இருக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், இதழியல், கேட்டரிங், வங்கியியல், மரைன், ஏரோநாட்டிக்கல், விளம்பர மாடலிங், கம்ப்யூட்டர், சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், ஓட்டல் மேனேஜ்மென்ட், விவசாயம், ஆட்டோமொபைல், பயிற்சி பெறும் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்களும் ஓரளவு நன்றாகவே படிப்பர். படிப்புக்குத் தேவையான செலவுக்கு தடங்கல் ஏற்படலாம். சக மாணவர்களின் உதவி உறுதுணையாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
அரசியல்வாதிகள்: புதிய ஆதரவாளர் களின் வருகையால் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்பாடுகளைக் கண்டு எதிரிகள் தாமாகவே விலகிச்செல்வர். புத்திரர்களின் உதவி தக்க சமயத்தில் கைகொடுக்கும். வழக்கு விவகாரங்கள் அனுகூலமாக முடியும் வாய்ப்பு குறைவு. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் புதிய மாற்றங்களை உருவாக்குவர். குருவின் அதிசார காலத்தில் பதவியில் உள்ளவர்கள் அதிக பொறுப்புடன் செயல்படுவது நன்மை தரும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு சாகுபடி செலவுக்கு தட்டுப்பாடு இருக்காது. மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவே லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் இழுத்தடிக்கும்.
வணங்க வேண்டிய தெய்வம் : லட்சுமி
பரிகார பாடல்
உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே!
உலகமெல்லாம் காத்துநிற்கும் தேவி மகாலட்சுமியே!
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்ட லட்சுமியே! நிலையான
அருள் செல்வம் அருள்பவளே!
உன் பாதம் சரணடைந்தோம் நமல் தருவாய் அம்மா!

No comments:

Post a Comment