Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-விருச்சிகம்




விசாகம் 4, அனுஷம், கேட்டை
தொழிலில் லாபம், - மருத்துவச் செலவு


நேர்மையான செயல்பாடு கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் ராகு, எட்டில் கேது, 11ல் சனி என்ற வகையில் கிரக அமர்வு உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக ராசிக்கு 5ம் இடமான மீனத்தில் சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை அனுகூலமாக பிரவேசம் செய்கிறார். நியாய தர்ம உணர்வு மேலோங்கும். உறவினர்களிடம் மென்மையான அணுகுமுறையுடன் நடந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வேண்டாத வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடும் உருவாகும். சமூகத்தில் நன்மதிப்பை தக்கவைத்துக் கொள்வீர்கள். வீடு, வாகன வகையில் பெரிய அளவிலான மாற்றங்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையற்ற செலவு உருவாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கி பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர். பூர்வ சொத்தின் மூலமாக அதிக லாபம் கிடைக்கும். இஷ்ட, குலதெய்வ வழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவு பலப்படும்.
உடல்நலம் சுமாராக இருக்கும். கஷ்டப்பட்டு சேர்த்ததை மருத்துவத்துக்கு செலவழிக்க வேண்டியுள்ளதே என மனம் வருந்தும். எதிரிகளின் செயல்பாடும் தொந்தரவு தருவதாக இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்பப் பெருமையை நிலைநாட்டுவர். நண்பர்களுடன் உறவு பலப்படும். சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும். இளம் வயதினருக்கு சுபநிகழ்ச்சிகள் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் இனிதாக நிறைவேறும். உங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த வகையில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். நவீன யுக்திகளைக் கையாண்டு லாபத்தை பெருக்கிக் கொள்வீர்கள். நிலுவைப்பணம் பெருமளவில் வசூலாகும். மூத்த சகோதரர்களின் அன்பும் ஆதரவும் தக்க தருணத்தில் கைகொடுக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு அனுகூல பலன் கிடைக்கும்.
தொழிலதிபர்கள்: வாகனம், மரம், தீப்பெட்டி, பட்டாசு, இரும்பு, காகிதம், மருத்துவ உபகரணங்கள், மின்சாதனங்கள் சார்ந்த தொழில் செய்பவர்கள், மலைத்தோட்ட அதிபர்கள் தொழிலில் தேவையான வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவர். உற்பத்தியும் தரமும் அதிகரிக்கும். பணவரவு கூடும். மற்ற தொழில் செய்வோருக்கும் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் பங்குதாரரிடம் தகுந்த ஆலோசனைகளை வழங்கி தொழிலை மேம்படுத்துவர். பணியாளர் களுக்கு தகுந்த சலுகை வழங்கி ஊக்கப் படுத்துவீர்கள். கிட்டங்கிகளில் கடும் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துங்கள். இல்லாவிட்டால் பொருட்கள் திருட்டு, சேதம் ஆகிய பலன்களை சந்திக்க நேரலாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, பலசரக்கு, கண்ணாடி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகு சாதனம், தண்ணீர் சார்ந்த பொருட்கள், அலங்கார பொருட்கள், ரப்பர், தோல் பொருட்கள், மலைத்தோட்ட பயிர், உடற்பயிற்சி கருவி, புத்தகம், கட்டுமானப் பொருட்கள், விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்பவர்கள் அளவான முதலீட்டில் கூடுதல் லாபம் பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களையும் விட லாபம் நன்றாக இருக்கும். அரசு, தனியார் நிறுவனங்களில் விண்ணப்பித்த கடன் எளிதாக கிடைக்கும். அதன்மூலம் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். சரக்கு வாகன வகையில் சீரான வருமானம் கிடைக்கும். சரக்கு கிட்டங்கி பாதுகாப்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு அவசியம்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் குறுக்கிடும் தடைகளை உறுதியான மனதுடன் எதிர் கொள்வர். உயர் அதிகாரிகளின் ஆதரவும் வழிகாட்டுதலும் பணியின் தரத்தை உயர்த்தும். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை, விரும்பிய இடமாற்றம் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் கிடைக்க வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் ஆதரவுடன் செயல்படுவர். உணவுப் பண்டம் தயாரிப்பு, எலக்ட்ரிக்கல், மருத்துவம், விவசாயத்துறை பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பு, உபரி வருமானம் பெறுவர்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் சில சிரமங்களுக்கு ஆளாக நேரிட்டாலும் நிர்வாகத்திடம் கேட்ட சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல் ஆதரவில் மகிழ்ச்சியுடன் வாழ்வு நடத்துவர். புத்திரப்பேறு நீண்டநாள் தாமதமானவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு தொழில் விஷ யத்தில் கணவரின் ஒத்துழைப்பும் தோழியின் ஆலோசனையும் கிடைக்கப்பெறும். திருப்திகரமான வகையில் வருமானம் இருக்கும்.
மாணவர்கள்: விவசாயம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், சிவில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினியரிங், சட்டம், பயோகெமிஸ்ட்ரி, வங்கியியல், ஜர்னலிசம், கேட்டரிங், மார்க்கெட்டிங் பயிற்சி மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து சிறந்த தர தேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் இவர்களையும் விட நன்றாகப் படிப்பர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் பலமாக கிடைக்கும். சக மாணவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் சிறு தாமதம் உண்டாகும்.
அரசியல்வாதிகள்: அரசியல் பணியில் புதிய மாற்றங்களை உருவாக்கி எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். எதிர்பார்த்த வகையில் ஆதரவாளர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு அதிகாரிகளிடம் இதமான அணுகுமுறையை பின்பற்றினால் காரியம் சாதித்துக் கொள்ளலாம். எதிரிகளால் தொந்தரவு அதிகரிக்கும். அரசியல் பணி சிறக்க புத்திரர்கள் தங்களால் இயன்ற உதவி செய்வர். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் மூலதன தேவைக்கு கடன் வாங்க நேரிடும். வெளியூர் பயணம் இனிய அனுபவங்களைத் தரும்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளில் அக்கறையுடன் பணியாற்றுவீர்கள். உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் வருமானம் பெருகும். நிலம் தொடர்பான விவகாரங்களில் பொறுமைதேவைப்படும்.
வணங்க வேண்டிய தெய்வம்: தெட்சிணாமூர்த்தி
பரிகார பாடல்
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை
ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.

No comments:

Post a Comment