Apr 27, 2010

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-கடகம்





புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
வெற்றி மேல் வெற்றி, - பேச்சால் பிரச்னை


மனோபலமும் செயல்திறமும் கொண்ட கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு 3ல் சனி, 6ல் ராகு, 12ல் கேது என்ற வகையில் கிரக அமர்வு இந்த ஆண்டு முழுவதும் உள்ளது. குருபகவான் மட்டும் அதிசார கதியாக சித்திரை 19 (மே 2) முதல் ஐப்பசி 21 (நவ.7) வரை ராசிக்கு 9ம் இடமான மீனத்தில் அனுகூலமாக பிரவேசிக்கிறார்.
நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். பணவரவு மனதிற்கு சந்தோஷத்தை உண்டாக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து பிரமிக்கத்தக்கதாய் உயரும். இளைய சகோதரர்கள் உங்களுடைய ஆதரவால் முன்னேற்றம் பெறுவர். வீடு, வாகன வகையில் தேவையான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வீர்கள். புதிதாக வீடு கட்டும் யோகமும் சிலருக்கு உண்டு. புத்திரர்கள் தங்கள் திறமையை வளர்த்து எதிர்கால முன்னேற்றத் திற்கு வழிவகை காண்பர். பூர்வீக சொத்தில் வருமானம் கூடும். புதிய சொத்துக்கள் சேரும். உடல்நிலை மிக ஆரோக்கியமாக இருக்கும். வழக்கு
விவகாரத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிரிகளால் உண்டாகும் தொல்லைகளுக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். பேச்சால் பிரச்னை வரலாம் என்பதால் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது.
பழைய கடன்களை அடைக்க தாராள பணவசதி உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதினால் குடும்பத்தில் ஒற்றுமை தழைத் தோங்கும். இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி
மாதங்களில் நிறைவேற தகுந்த சூழ்நிலை உருவாகும். நண்பர்களினால் ஆதாயம் பெறுவீர்கள். அவர்களின் உதவி தக்க தருணத்தில் கைகொடுக்கும். தொழில் சார்ந்த வகையில் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான புதிய மாற்றங்களை செய்து நற்பலன் பெறுவீர்கள். சிலருக்கு பணத்தை சேமிக்கும் வாய்ப்பு ஏற்படும். மூத்த சகோதரர்களின் ஆலோசனைகள் மனதிற்கு நிறைவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மனமகிழ்ச்சியையும், திருப்திகரமான பணவரவையும் பெற ஏதுவாக அமையும்.
தொழிலதிபர்கள்: எலக்ட்ரானிக்ஸ், குளிர்பானம், தண்ணீர் சார்ந்த தொழில் செய்பவர்கள், கட்டுமான பொருட்கள், அரிசி ஆலை, டெக்ஸ்டைல்ஸ், மருந்து, மருத்துவ உபகரணங்கள், லாட்ஜ், கல்வி நிறுவனம், நிதி நிறுவன அதிபர்கள் திட்டமிட்ட இலக்கை எட்டி தாராள பணவரவு காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிறுவனத்தின் புகழ் சிறந்து விளங்கும். மற்ற தொழில் செய்வோருக்கும் சிறந்த லாபம் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் புதிதாக கிளை தொடங்குதல், உபதொழில் மேற்கொள்ளுதல் போன்ற நல்ல யோகம் அமையும்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமான பொருட்கள், மளிகை, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருந்து, ரப்பர், தோல் பொருட்கள், எண்ணெய்வித்து, தண்ணீர் சார்ந்த பொருட்கள், கண் கண்ணாடி, இறைச்சி, மீன், பீங்கான் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், வீட்டுசாதன பொருட்கள், பால் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் புதிய உத்திகளை புகுத்தி நல்ல வளர்ச்சி காண்பர். இதர வியாபாரிகளுக்கு ஓரளவு வருமானம் கிட்டும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் கூடுதல் வாடிக்கையாளர்கள் வரவால் உபரி வருமானம் உண்டாகும். சரக்கு வாகன வகையிலும் அனுகூல பலன் உண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். சக பணியாளர்களின் அன்பும், ஆதரவும் முழுமையாக கிடைக்கும். குருவின் அதிசார பெயர்ச்சி காலத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், பண உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். அதிகாரிகளின் ஆதரவால் சிலருக்கு வெகுமதி கிடைக்கும். கட்டடம், மருத்துவம், சமையல் சார்ந்த பணியாளர்களுக்கு கூடுதல் பணிவாய்ப்பும், பொருளாதார வளமும் உண்டாகும். இளம் பணியாளர்களுக்கு வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி மாதங்களில் திருமண முயற்சி இனிதாக நிறைவேறும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பணியிடங்களில் இருந்த குளறுபடி விலகி மனதிற்கு இதமான சூழல் உண்டாகும். பதவி உயர்வு, பணச்சலுகை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை உயர்த்தும் வகையில் சிறப்பாக செயல்படுவர். புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்கியம் உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும்.
சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். புதிய உத்திகளை கையாண்டு வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பர். சிலருக்கு பணம் சேமிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மாணவர்கள்: மருத்துவம், சிவில், ஏரோநாட்டிக்கல், மரைன், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் படிப்பு, பயோகெமிஸ்ட்ரி, விவசாயம், கேட்டரிங், சட்டம், உணவு பதப்படுத்துதல், ஓவியம், ராணுவம், மூலிகை பயிர் வளர்ப்பு சார்ந்த துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் குருபகவானின் அனுகூல பார்வையால் உயர்ந்த தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் இவர்களைவிட சிறப்பாக படிப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருந்தாலும் சிக்கன நடவடிக் கையை மேற்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. சக மாணவர்கள் அன்புடன் பழகுவர். பாராட்டு, விருது போன் றவை கிடைத்து பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: அரசு அதிகாரிகளின் ஆதரவு பக்க பலமாய் இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்பு கிடைக்கும் யோகம் உண்டாகும். ஆதரவாளர்கள் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை மனதிற்கு தைரியத்தை தரும். அரசியல் பணியில் புத்திரரின் உதவி சரியான சமயத்தில் கைகொடுக்கும். அரசியலோடு தொழில் நடத்துபவர்கள் சீரான முன்னேற்றம் பெறுவர். மறைமுக எதிரிகளால் இருந்த தொந்தரவு விலகும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து உபரி வருமானம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை விலகும்.
வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்
பரிகார பாடல்
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிமதி
செஞ்சடையாளை வஞ்சக நெஞ்சு அடையாளை தயங்கும் நுண்ணூல்
இடையாளை எங்கள் பெண்மான்
இடையாளை இங்கு என்னை இனி
படையாளை உங்களையும்
படையாவண்ணம் பார்த்திருமே!

No comments:

Post a Comment